| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2902 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (எம்பெருமானைத் துதிக்க அவதரித்த வேதங்களும் பகவத் குண கீர்த்தனத்தில் அந்வயம் பெற்ற வத்தனையே யொழிய வேறில்லை; ஆக, வேதங்களின் கதியே அதுவாகும்போது; நான் பேசித் தலைக்கட்டுவதென்று ஒன்றுண்டோ என்கிறார்.) 6 | ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6 | ஓதுவார் ஒத்து எல்லாம்,Oodhvaar otthu ellaam - அந்யயனம் செய்கிறவர்களை விட்டு நிரூபிக்கப்படுகின்ற ஸகல வேதங்களும் எவ்வுலகத்து எவ் எவையும்,Evvulagathu evv evaiyum - மற்றும் பலவுலகங்களிலுமுண்டான பலவகைப்ப்ட சாஸ்திரங்களும் சாது ஆய்,Saadhu aay - (பொய் கலவாமல்) உள்ளபடியே சொல்லுகின்றனவாகி நின் புகழின் தகை அல்லால்,Ninn pugalil thakai allaal - உன்னுடைய குணநீர்த்தனத்தில் தத்பரங்கள் என்கிற இவ்வளவல்லாமல் பிறிது இல்லை,Pirithu illai - வேறில்லை, ஒன்றையும் பூர்த்தியாகச்சொல்லனவல்ல என்றபடி போது வாழ்புனம்,Podhu vaazhpunam - பூக்கள் விளங்கப்பெற்ற நல்ல நிலத்திலுண்டான துழாய் முடியினாய்,Thuzhaay mudiyinaay - திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்துள்ளவனே! பூவின் மேல் மாதுவாழ் மார்பினாய்,Poovin mel maadhuvazh maarbinay - தாமரைப்பூவில் தோன்றிய பெரிய பிராட்டியார் வாழுமிடமான திருமார்பையுடையவனே! என் சொல்லி,En soll - எத்தைச்சொல்லி யான் வாழ்த்துவன்,Yaan vaazhthuvan - நான் துதிப்பேன்! |