Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2902 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2902திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (எம்பெருமானைத் துதிக்க அவதரித்த வேதங்களும் பகவத் குண கீர்த்தனத்தில் அந்வயம் பெற்ற வத்தனையே யொழிய வேறில்லை; ஆக, வேதங்களின் கதியே அதுவாகும்போது; நான் பேசித் தலைக்கட்டுவதென்று ஒன்றுண்டோ என்கிறார்.) 6
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6
ஓதுவார் ஒத்து எல்லாம்,Oodhvaar otthu ellaam - அந்யயனம் செய்கிறவர்களை விட்டு நிரூபிக்கப்படுகின்ற ஸகல வேதங்களும்
எவ்வுலகத்து எவ் எவையும்,Evvulagathu evv evaiyum - மற்றும் பலவுலகங்களிலுமுண்டான பலவகைப்ப்ட சாஸ்திரங்களும்
சாது ஆய்,Saadhu aay - (பொய் கலவாமல்) உள்ளபடியே சொல்லுகின்றனவாகி
நின் புகழின் தகை அல்லால்,Ninn pugalil thakai allaal - உன்னுடைய குணநீர்த்தனத்தில் தத்பரங்கள் என்கிற இவ்வளவல்லாமல்
பிறிது இல்லை,Pirithu illai - வேறில்லை, ஒன்றையும் பூர்த்தியாகச்சொல்லனவல்ல என்றபடி
போது வாழ்புனம்,Podhu vaazhpunam - பூக்கள் விளங்கப்பெற்ற நல்ல நிலத்திலுண்டான
துழாய் முடியினாய்,Thuzhaay mudiyinaay - திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்துள்ளவனே!
பூவின் மேல் மாதுவாழ் மார்பினாய்,Poovin mel maadhuvazh maarbinay - தாமரைப்பூவில் தோன்றிய பெரிய பிராட்டியார் வாழுமிடமான திருமார்பையுடையவனே!
என் சொல்லி,En soll - எத்தைச்சொல்லி
யான் வாழ்த்துவன்,Yaan vaazhthuvan - நான் துதிப்பேன்!