| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2903 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (ஞானத்திற் சிறந்த பலபேர்கள் திரண்டு ஏத்தினாலும் அதுவும் பகவத் குணங்களுக்குத் திரஸ்காரமாகவே தலைக்கட்டு மென்கிறார்.) 7 | வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய் கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7 | வாழ்த்துவார் பலர் ஆக,Vaazhthuvaar palar aaga - துதிப்பவர்கள் பலருண்டாவதற்காக, மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று,Mooththa neer ulagu ellaam padai endru - ‘காரண ஜலமான ஏகார்ணவத்துக்குள்ளே லோகங்களையெல்லாம் உண்டாக்குவாயாக’ என்று சொல்லி. நின்னுள்ளே,Ninnullee - உன்னுடைய ஸங்கல்பத்திலே நான்முகனை,Naanmuganai - பிரமனை முதல் படைத்தாய்,Mudhal padaitthaay - முந்துற ஸ்ருஷ்டித்தவனே! கேழ்ந்த சீர்,Kezhndha seer - சிறந்த (ஞானமுதலிய) குணங்களையுடைய அரன் முதலா,Aran mudhala - சிவன் முலான அமரர்,Amarar - தேவர்கள் கிளர் தெய்வம் ஆய் கிளர்ந்து,Kilar theyvam aay kilarndhu - மிகுந்த சக்தியையுடைய தெய்வங்களாகத்தோன்றி சூழ்ந்து,Soozhndhu - ஒவ்வொரு விஷயங்களைப் பற்றிக்கொண்டு துதித்தால்,Thuthithaal - தோத்திரம் பண்ணினால் உன்,Un - உன்னுடைய தொல் புகழ்,Thol pugal - நித்ய ஸித்தமான கீர்த்தி மாசூணாதே,Maasoonaadhae - அவத்யம் பெற்றதாகாதோ!. |