Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2904 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2904திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (கீழ்ப்பாட்டில் சொல்லப்படாத அர்த்தம் இப்பாட்டில் என்ன சொல்லப்படுகிறதென்று விமர்சிக்கவேணும். அரன் முதலான அமரர்கள் ஏத்தினாலும் அவத்யம் என்றது கீழ்ப்பாட்டில்; அமரர்கோன் ஏத்துவம் அவத்யம் என்கிறது இப்பாட்டில்) 8
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8
மாசு! உணா,Maasu! Uuna - அவத்யம் சிறுதுமில்லாமல்
சுடர்,Sudar - சோதிமயமான
உடம்பு ஆய்,Utampu aay - திருமேனியை யுடையனாய்
மலராது குவியாது,Malaradhu kuviyaadhu - ஸங்கோச விகாஸங்களற்று
மாசு உணா,Maasu uuna - (ஸம்சயம் விபரீதம் முதலான) அவத்யமில்லாத
ஞானம் ஆய்,Gyaanam aay - ஞானத்தையுடையையாய்
முழுதும் ஆய்,Muzhudhum aay - ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்
முழுது இயன்றாய்,Muzhudhu iyanraai - அவையெல்லாம் உன் பக்கலிலே வர்த்திருக்கும்படி அவற்றுக்கு ஆச்ரயமானவனே!
மாசு உணாவான் கோலத்து அமரர்கோன்,Maasu unavaan koalathu amararkon - குற்றமற்ற அம்ராக்ருதமான ஜ்ஞரகாதி பூஷணாங்களையுடையனாய் தேவர்களுக்குக் கோமானாகிய பிரமன்
வழிபட்டால்,Vazhipattaal - (உன்னைத்) தோத்திரம் பண்ணினால்
மாசு உணா உனபாதம் மலர் சோதி,Maasu uuna unapaadham malar sodhi - குற்றமற்ற உனது பாதாரவிந்தத்தின் தேஜஸ்ஸானது
மழுங்காதே,Mazhungaadhey - குறையுற்றதாகாதோ?