| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2904 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (கீழ்ப்பாட்டில் சொல்லப்படாத அர்த்தம் இப்பாட்டில் என்ன சொல்லப்படுகிறதென்று விமர்சிக்கவேணும். அரன் முதலான அமரர்கள் ஏத்தினாலும் அவத்யம் என்றது கீழ்ப்பாட்டில்; அமரர்கோன் ஏத்துவம் அவத்யம் என்கிறது இப்பாட்டில்) 8 | மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய் மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால் மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8 | மாசு! உணா,Maasu! Uuna - அவத்யம் சிறுதுமில்லாமல் சுடர்,Sudar - சோதிமயமான உடம்பு ஆய்,Utampu aay - திருமேனியை யுடையனாய் மலராது குவியாது,Malaradhu kuviyaadhu - ஸங்கோச விகாஸங்களற்று மாசு உணா,Maasu uuna - (ஸம்சயம் விபரீதம் முதலான) அவத்யமில்லாத ஞானம் ஆய்,Gyaanam aay - ஞானத்தையுடையையாய் முழுதும் ஆய்,Muzhudhum aay - ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய் முழுது இயன்றாய்,Muzhudhu iyanraai - அவையெல்லாம் உன் பக்கலிலே வர்த்திருக்கும்படி அவற்றுக்கு ஆச்ரயமானவனே! மாசு உணாவான் கோலத்து அமரர்கோன்,Maasu unavaan koalathu amararkon - குற்றமற்ற அம்ராக்ருதமான ஜ்ஞரகாதி பூஷணாங்களையுடையனாய் தேவர்களுக்குக் கோமானாகிய பிரமன் வழிபட்டால்,Vazhipattaal - (உன்னைத்) தோத்திரம் பண்ணினால் மாசு உணா உனபாதம் மலர் சோதி,Maasu uuna unapaadham malar sodhi - குற்றமற்ற உனது பாதாரவிந்தத்தின் தேஜஸ்ஸானது மழுங்காதே,Mazhungaadhey - குறையுற்றதாகாதோ? |