Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2905 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2905திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (எம்பெருமானது ஸௌலப்யாதிசயத்திலீடுபட்டுப் பேசுகிற பாசுரமிது.) 9
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9
தொழும் காதல்,Thozhum kaadhal - தொழவேணுமென்கிற காதலையுடைய
களிறு,Kilaru - கஜேந்திராழ்வானை
அளிப்பான்,Alippaan - காப்பதற்காக
மழுங்காத வைநுதிய சக்கரம் நல் வலத்தையாய்,Mazhungaadha vainudhiya sakaram nal valathaiyaay - மங்குதலில்லாத கூர்மை பொருந்திய வாயையுடைய சக்கரப்படையை அழகிய வலத்திருக்கையிலுடையையாய்
புள் ஊர்ந்து,Pul oornthu - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு
தோன்றினை,Thoonrinai - (மடுவின் கரையிலே) வந்து தோன்றினாய்; (இஃது ஒக்கும் இப்படியல்லாமல்)
மழுங்காத ஞானமே படை ஆக,Mazhungaadha nyaaname padai aaga - அமோகமான ஸங்கல்ப ரூப ஜ்ஞானமே கருவியாக
மலர் உலகில்,Malar ulagil - விசாலமான உலகத்திலே
தொழும்பு ஆயார்க்கு,Thozhumbu aayaarkku - அடியவர்கட்கு
அளித்தால்,Alithaal - உதவினால்
உன்,Un - உன்னுடைய
சுடர்சோதி,Sudar sodhi - சிறந்த தேஜஸ்ஸு
மறையாதே,Maraiyaadhae - குன்றிவிடா