| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2905 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (எம்பெருமானது ஸௌலப்யாதிசயத்திலீடுபட்டுப் பேசுகிற பாசுரமிது.) 9 | மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9 | தொழும் காதல்,Thozhum kaadhal - தொழவேணுமென்கிற காதலையுடைய களிறு,Kilaru - கஜேந்திராழ்வானை அளிப்பான்,Alippaan - காப்பதற்காக மழுங்காத வைநுதிய சக்கரம் நல் வலத்தையாய்,Mazhungaadha vainudhiya sakaram nal valathaiyaay - மங்குதலில்லாத கூர்மை பொருந்திய வாயையுடைய சக்கரப்படையை அழகிய வலத்திருக்கையிலுடையையாய் புள் ஊர்ந்து,Pul oornthu - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு தோன்றினை,Thoonrinai - (மடுவின் கரையிலே) வந்து தோன்றினாய்; (இஃது ஒக்கும் இப்படியல்லாமல்) மழுங்காத ஞானமே படை ஆக,Mazhungaadha nyaaname padai aaga - அமோகமான ஸங்கல்ப ரூப ஜ்ஞானமே கருவியாக மலர் உலகில்,Malar ulagil - விசாலமான உலகத்திலே தொழும்பு ஆயார்க்கு,Thozhumbu aayaarkku - அடியவர்கட்கு அளித்தால்,Alithaal - உதவினால் உன்,Un - உன்னுடைய சுடர்சோதி,Sudar sodhi - சிறந்த தேஜஸ்ஸு மறையாதே,Maraiyaadhae - குன்றிவிடா |