| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2906 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (பிரமன் முதலானாரும் உன் சேஷித்வத்தை யறிந்து ஆச்ரயிக்குமாறு நீ யிருக்கு மிருப்பு ஆச்சரியமோ வென்கிறார்.) 10 | மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10 | மறை ஆய,Marai aay - மறை பொருள்களையுடையவையான நால் வேதத்துள் நின்ற,Naal vaedhathul nindra - நான்கு வேதங்களுக்கும் உள்ளுறை பொருளாய் நின்ற மலர் சுடரே,Malar sudare - விகாஸத்தையுடைய சோதி வடிவானவளே! முறையால்,Muraiyaal - முறைப்படி இ உலகு எல்லாம்,e ulagu ellaam - இவ்வுலகங்களை யெல்லாம் படைத்து,Padaitthu - ஸ்ருஷ்டித்து இடந்து,Idandhu - (பிரளயத்திலே புக்கு) இடந்தெடுத்து உண்டு,Undu - (மஹாப்ரளயத்திலே) திருவயிற்றிலே வைத்து நோக்கி உமிழ்ந்து,Uzhindhthu - (பிறகு) வெளிப்படுத்தி அளந்தாய்,Alanthaay - (வாமன மூர்த்தியாய்) அளந்துகொண்ட பெருமானே! பிறை ஏறு சடையானும்,Pirai yeru sadaiyaanum - சந்திரகலை தங்கிய சடையையுடையனான சிவபிரானும் நான்முகனும்,Naanmuganum - நான்முகக்கடவுளும் இந்திரனும்,Indiranum - தேவேந்திரனும் இறை ஆதல் அறிந்து ஏத்த,Irai aadhal arindhu yetha - நீயே ஸர்வஸ்வாமி யென்னுமிடத்தை யுணர்ந்து துதிக்குமாறு வீற்றிருத்தல் இது,Veetiruthal idhu - எழுந்தருளியிருக்குமிருப்பு வியப்பே,Viyappe - ஆச்சரியமோ? |