Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2907 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2907திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (இப்பதிகம் கடல்சூழ்ந்த மண்ணுலகில் அஸத் கல்பராக வுள்ளவர்களை உஜ்ஜீவிப்பித்து ஸம்ஸாரஸம்பந்த மற்றவர்களாக்கும் என்றாராயிற்று.) 11
வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11
வியப்பு ஆய,Viyappu aay - (அந்யத்ர) ஆச்சர்யகரமானவை
வியப்பு இல்லா,Viyappu illa - (தன்னிடத்து) ஆச்சர்யகரமாகக் பெறாதவனும்
மெய் ஞானம் வேதியனை,Mei gyaanam vaedhiyanai - (மெய்யுணர்வுக்கிடமான வேதங்களால் பேசப்படுபவனுமான பெருமானை,
சயம் புகழார் பலர் வாழும்,Sayam pugalaaar palar vaazhum - ஜயசீலமான புகழையுடைய பல நல்லார் நவிலுமிடமான
தடம் குருகூர்,Thadam kurukoor - பெரிய திருநகரிக்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
தொழுது,Thozhudhu - ஸேவித்து
துயக்கு இன்றி,Thuyakku indri - அவத்ய மொன்று மின்றியே
உரைத்த,Uraitha - அருளிச்செய்த
ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,I pattum - இத்திருவாய்மொழி
ஒலி முந்நீர் ஞாலத்து,Oli munneer nyaalathu - ஒலிமிக்க கடல்சூழ்ந்த நிலவுலகததில்
உய கொண்டு,Uya kondhu - (உள்ள ஸம்ஸாரிகளை) உஜ்ஜீவனப்படுததி
பிறப்பு அறுக்கும்,Pirappu arukkum - ஸம்ஸார ஸம்பந்த மற்றவர்களாக்கும்