| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2907 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (இப்பதிகம் கடல்சூழ்ந்த மண்ணுலகில் அஸத் கல்பராக வுள்ளவர்களை உஜ்ஜீவிப்பித்து ஸம்ஸாரஸம்பந்த மற்றவர்களாக்கும் என்றாராயிற்று.) 11 | வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன் துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும் உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11 | வியப்பு ஆய,Viyappu aay - (அந்யத்ர) ஆச்சர்யகரமானவை வியப்பு இல்லா,Viyappu illa - (தன்னிடத்து) ஆச்சர்யகரமாகக் பெறாதவனும் மெய் ஞானம் வேதியனை,Mei gyaanam vaedhiyanai - (மெய்யுணர்வுக்கிடமான வேதங்களால் பேசப்படுபவனுமான பெருமானை, சயம் புகழார் பலர் வாழும்,Sayam pugalaaar palar vaazhum - ஜயசீலமான புகழையுடைய பல நல்லார் நவிலுமிடமான தடம் குருகூர்,Thadam kurukoor - பெரிய திருநகரிக்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் தொழுது,Thozhudhu - ஸேவித்து துயக்கு இன்றி,Thuyakku indri - அவத்ய மொன்று மின்றியே உரைத்த,Uraitha - அருளிச்செய்த ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,I pattum - இத்திருவாய்மொழி ஒலி முந்நீர் ஞாலத்து,Oli munneer nyaalathu - ஒலிமிக்க கடல்சூழ்ந்த நிலவுலகததில் உய கொண்டு,Uya kondhu - (உள்ள ஸம்ஸாரிகளை) உஜ்ஜீவனப்படுததி பிறப்பு அறுக்கும்,Pirappu arukkum - ஸம்ஸார ஸம்பந்த மற்றவர்களாக்கும் |