திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2908 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2908திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார்.) 1
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1
பதவுரை Show / Hide
முந்நீர் ஞாலம் படைத்த,Munneer gnaalam padaitha - கடல் சூழ்ந்த இவ்வுலகை ஸ்ருஷ்டித்தவனும்
எம் முகில் வண்ணனே,Em mugil vannaney - மேகத்தின் நன்மைபோன்ற தன்மையை யுடையவனுமான எம்பெருமானே!
அ நாள்,A naal - அந்த ஸ்ருஷ்டி ஸமயத்தில்
நீ தந்த,Nee thantha - நீ கொடுத்தருளின
ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய
வழி,Valzi - வழியிலேயே
உழல்வேன்,Uzhala ven - நடந்துகேட்டுத் திரிகின்றேன்
வெம்நாள்,Vemnaal - (உணர்ச்சி யுண்டான பின்பு) பரிதாபமயமான நாளிலே
நோய் வீய,Noi veeya - வியாதிகள் தீரும்படி
வினைகளை,Vinaiyai - கரும பந்தங்களை
வேர் அறுபாய்ந்து,Ver arupayinthu - வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று
யான்,Yaan - அடியேன்
உன்னை,Unnai - (மஹோபகாரனான) உன்னை
இனி எந்நாள் வந்து கூடுவன்,Ini ennaal vandhu kooduvan - அடையப் பெறுவது இனி என்றைக்கோ!