| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2909 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஜலஸ்தல விபாகமில்லாமல் எல்லார் தலைமேலும் நீ திருவடிகளை வைத்தருளின காலத்தையும் தப்பின நான் இனி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்றைக்கோ வென்கிறார்) 2 | வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2 | வல்,Val - வலிமைதாங்கிய மா,Maa - பெரிய வையம்,Vaiyam - பூமியை அளந்த,Alandha - (மஹாபலியிடத்தில் பிக்ஷை பெற்று) அளந்து கொண்ட எம் வாமனா,Em Vaamana - எமது வாமனமூர்த்தியை படி நின்ற,Padi ninra - பொருந்தி வாழ்கின்ற யான்,Yaan - நான் தொல்,Tol - பழமையான மா,Maa - பெரிய வல்,Val - உறுதியான வினை,Vinai - பாவங்களினுடைய தொடர்களை,Thodargalai - அநுபந்தங்களை நின் பல் மா மாயம்,Nin pal maa maayam - உனது திருவிளையாடலுக்குக் கருவியான குணவேற்றுமையாலும் காரிய வேற்றுமையாலும் பலவகைப்பட்ட பெரிய மாயையாகிய பிரகிருதி மூலமான பல் பிறவியில்,Pal piraviyil - தேவர் முதலிய பலவகைப்பிறப்பில் முதல் அரிந்து,Mudhal arinthu - வேரோடே அறுத்து நின்,Nin - (ப்ராப்யனான) உன்னுடைய மா நாள்,Maa naal - சிறந்த திருவடிகளை சேர்ந்து,Serndhu - அடைந்து நிற்பது,Nirpathu - நிலைபெற்றிருப்பது எஞ்ஞான்று கொல்,Yennjaandru kol - என்றைக்கோ? |