Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2909 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2909திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஜலஸ்தல விபாகமில்லாமல் எல்லார் தலைமேலும் நீ திருவடிகளை வைத்தருளின காலத்தையும் தப்பின நான் இனி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்றைக்கோ வென்கிறார்) 2
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2
வல்,Val - வலிமைதாங்கிய
மா,Maa - பெரிய
வையம்,Vaiyam - பூமியை
அளந்த,Alandha - (மஹாபலியிடத்தில் பிக்ஷை பெற்று) அளந்து கொண்ட
எம் வாமனா,Em Vaamana - எமது வாமனமூர்த்தியை
படி நின்ற,Padi ninra - பொருந்தி வாழ்கின்ற
யான்,Yaan - நான்
தொல்,Tol - பழமையான
மா,Maa - பெரிய
வல்,Val - உறுதியான
வினை,Vinai - பாவங்களினுடைய
தொடர்களை,Thodargalai - அநுபந்தங்களை
நின் பல் மா மாயம்,Nin pal maa maayam - உனது திருவிளையாடலுக்குக் கருவியான குணவேற்றுமையாலும் காரிய வேற்றுமையாலும் பலவகைப்பட்ட பெரிய மாயையாகிய பிரகிருதி மூலமான
பல் பிறவியில்,Pal piraviyil - தேவர் முதலிய பலவகைப்பிறப்பில்
முதல் அரிந்து,Mudhal arinthu - வேரோடே அறுத்து
நின்,Nin - (ப்ராப்யனான) உன்னுடைய
மா நாள்,Maa naal - சிறந்த திருவடிகளை
சேர்ந்து,Serndhu - அடைந்து
நிற்பது,Nirpathu - நிலைபெற்றிருப்பது
எஞ்ஞான்று கொல்,Yennjaandru kol - என்றைக்கோ?