| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2910 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீவாமன மூர்த்தியான காலத்தில் தப்பினவர்களையும் விஷயீகரீப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணனாய் வந்து அவதரித்த காலத்திலும் தப்பினேனென்கிறார்) 3 | கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3 | கொல்லா,Kolla - கொல்லுகைக்குக் கருவியல்லாமல் பா,Pa - குதிரையை நடத்துவதான கோல்,Kol - சாட்டையே கருவியாக கொலை செய்து,Kolai seydhu - (எதிரிகளை) முடித்து பாரதம் போர்,Bharatham Por - பாரத யுத்தத்தில் எல்லார் சேனையும்,Ellaar senaiyum - (பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும் இரு நிலத்து,Iru nilathu - இப்பெரிய பூமியில் அவித்த,Avitha - தொலைத்த எந்தாய்,Endhai - ஸ்வாமியே! பொல்லா,Polla - துன்பங்களுக்குக் காரணமான ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய புணர்வினை,Punarvinai - சம்பந்தத்தை அறுக்கல் அரு,Arukkal aru - அறுக்க எண்ணினாலும் அது அறுபடாது: யான்,Yaan - (இதிலே அகப்பட்ட) நான் உன்னை,Unnai - (ஸர்வசக்தனான) உன்னை சார்வது,Saarvadhu - கிட்டுவதாகிய ஓர் சூழ்ச்சி,Or Soozhchi - ஒரு பாயத்தை சொல்லாய்,Sollai - சொல்லியருள் |