Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2910 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2910திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீவாமன மூர்த்தியான காலத்தில் தப்பினவர்களையும் விஷயீகரீப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணனாய் வந்து அவதரித்த காலத்திலும் தப்பினேனென்கிறார்) 3
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3
கொல்லா,Kolla - கொல்லுகைக்குக் கருவியல்லாமல்
பா,Pa - குதிரையை நடத்துவதான
கோல்,Kol - சாட்டையே கருவியாக
கொலை செய்து,Kolai seydhu - (எதிரிகளை) முடித்து
பாரதம் போர்,Bharatham Por - பாரத யுத்தத்தில்
எல்லார் சேனையும்,Ellaar senaiyum - (பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும்
இரு நிலத்து,Iru nilathu - இப்பெரிய பூமியில்
அவித்த,Avitha - தொலைத்த
எந்தாய்,Endhai - ஸ்வாமியே!
பொல்லா,Polla - துன்பங்களுக்குக் காரணமான
ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய
புணர்வினை,Punarvinai - சம்பந்தத்தை
அறுக்கல் அரு,Arukkal aru - அறுக்க எண்ணினாலும் அது அறுபடாது:
யான்,Yaan - (இதிலே அகப்பட்ட) நான்
உன்னை,Unnai - (ஸர்வசக்தனான) உன்னை
சார்வது,Saarvadhu - கிட்டுவதாகிய
ஓர் சூழ்ச்சி,Or Soozhchi - ஒரு பாயத்தை
சொல்லாய்,Sollai - சொல்லியருள்