| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2911 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (பெருமானே! அவதாரங்களுக்குத் தப்பினேன் என்பது மாத்திரமேயோ? எல்லாரையும் ரக்ஷிக்கைக்காக நீ ஸர்வ வ்யாபியாயிருக்கிற இருப்பும் எனக்குக் கார்யயமாகவில்லையே, நான் உன்னைப் பெறும்வழி நீயே பார்த்தருள வேணுமென்கிறார்) 4 | சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும் ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய் தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4 | சூழ்ச்சி,Soozhchi - (எல்லாவற்றையும்) சூழ்ந்து கொள்ளுகிற சுடர் ஒளி,Sudar oli - மிகவும் விலக்ஷணமான ஞானம் ஆகி,Gnaanam aagi - ஞானத்தையுடையாய் என்றும்,Endrum - எக்காலத்திலும் ஏழ்ச்சி கேடு இன்றி,Ezhchi kedu indri - விகாஸமும் ஸங்கோசமுமில்லாமல் எங்ஙனும்,Enganum - எவ்விடத்திலும் நிறைந்த,Niraindha - வியாபித்திருக்கின்ற எந்தாய்,Endhai - எமது ஸ்வாமியே மற்று எங்கும்,Matru engum - உன்னைத் தவிர எந்த விஷயத்திலும் தாழ்ச்சி தவிர்ந்து,Thaalzchi thavirndhu - கால்தாழ்ந்திருப்பதை விட்டு நின்தான் இணை கீழ்,Nin thaan inai keel - உனது உபய பாதங்களின் கீழே வாழ்ச்சி,Vaalchi - வாழ்ந்திருக்குமிருப்பை வந்து,Vandhu - (யான் சேரும்வகை யான் அடையும் விதத்தை) (என் கண் முன்னே) வந்து தோன்றி அருளாய்,Arulaai - அருளிச் செய்யவேணும். |