| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2914 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (கீழ்ப்பாட்டில் “நின்நற்பொற் சோதித்தாள்” என்று திருவடியின் பரம போக்யதையின் ப்ரஸ்தாவம் வரவே அந்தத் திருவடி விஷயத்தில் நெஞ்சுக்கு ஒரு பதற்றம் உண்டாயிற்று; அது கண்ட ஆழ்வார் நெஞ்சை நோக்கி, ‘கெடுவாய்! உனது நிலைமையை ஆராயாது நல்லதை யாசைப்பட்டால் அது உனக்குக் கிடைக்குமோ?” என்கிறார்.) 7 | எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7 | நெஞ்சே!,Nenjae! - மனமே இருந்து இருந்து,Irundhu irundhu - நிரந்தரமாக இரங்கி,Irangi - வருந்தி மெய் ஞானம் இன்றி,Mei gnaanam indri - யதார்த்த ஞானமில்லாமையாலே வினை இயல் பிறப்பு,Vinai iyal pirappu - பாபங்களின் பலனாக சேர்ந்த ஜன்மங்களிலே அழுந்தி,Azhundhi - ஆழங்காற்பட்டு நாம்,Naam - இதுவே யாத்திரையாக இருக்கிற நாம் எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற,Yennjaandrum engum ozhivu aṛa niraindhu ninra - எல்லாக் காலத்திலும் எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் விடாலே பரிபூர்ணமாக வியாபித்து நிலைபெற்றிருக்கின்றவனும். மெய்ஞானம் சோதி,Mei gnaanam sothi - விசதமான ஜ்ஞானப்ரபையை யுடையவனுமான கண்ணனை,Kannanai - ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை எஞ்ஞான்று மேவுவதும்,Yennjaandru mevvadhum - என்னைக்குக் கிட்டக் கடவோம். |