| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2915 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (எம்பெருமானே! உன்னைப் பெறுகைக்கு நான் ஏதேனும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணியிருந்தேனாகில் அந்தப் பற்றாசுதன்னை வைத்துக் கொண்டாவது ‘ஏன் நமக்கு இன்னமும் இரங்கி யருளவில்லை?’ என்று நான் கரைந்து கூப்பிடலாம்; நானோ ஒரு ஸாதாநாநுஷ்டாநமும் பண்ணாதவன்; அப்படியிருந்தும், ஸாதநங்களை நிறைய அநுஷ்டித்துப் பலன் கைபுகப் பெறாதவன் கிடந்து துடிக்குமாபோலே நானும் துடித்துக் கதறுகின்றேனே! இது என்ன! என்று தமக்குத்தாமே விஸ்மயப் பட்டுக் கொள்ளுகிறார்.) 8 | மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன் பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8 | துன்பம் மேவு,Thunbam mevu - பலவகைத் துயரங்களை விளைக்கவல்ல வினைகளை,Vinaikalai - பாவங்களை ஓவுதல் இன்றி,Oavudhal indri - இடையறாமல் உன் கழல்,Un kazhal - உனது திருவடிகளை வணங்கிற்றிலேன்,Vanangittrilaen - பணிவதும் செய்திலேன் பாவு,Paavu - எங்கும் பரவிய தொல்,Tol - இயற்கையான சீர்,Seer - திருக்குணங்களையுடைய விடுத்தும் இலேன்,Viduththum ilaen - (தவன் முதலியவற்றால்) போக்கடித்துக் காண்டேனுமில்லை கண்ணா,Kanna - கண்ணபிரானே! என்,En - எனது விருப்பத்திற்குரிய பாஞ்சுடரே,Paanchudare - மேலான ஒளியுருவனே! காண்பான்,Kaanbaan - (உன்னைக்) காணும்பொருட்டு கூவுகின்றேன்,Koovugindraen - கூப்பிடுகின்றேன். எங்கு எய்த கூவுவன்,Engu eitha koovuvan - எங்கே கிட்டுவதாகக் கூப்பிடுவேன் |