திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2916 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2916திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார்.) 9
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9
பதவுரை Show / Hide
கொடு வினை,Kodu vinai - கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய
தூற்றுள் நின்று,Thoottrul ninru - நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று
பல காலம்,Pala kaalam - அநேக காலம்
வழி திகைத்து,Vali thigaiththu - வழி தெரியாமல் சுழன்று
அலமருகின்றேன்,Alamarugindren - வருந்திக் கிடக்கின்ற
பாவியேன்,Paaviyen - மஹாபாபியான நான்
அன்று,Andru - முன்பொருகால்
மேவி,Mevi - திருவள்ளமுவந்து
ஆநிரை,Aa nirai - பசுக்கூடட்ங்களை
காத்தவன்,Kaaththavan - ரக்ஷித்தவனும்
உலகம் எல்லாம் தாவிய,Ulagam ellaam thaaviya - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களையெல்லாம் அளந்தவனுமாகிய
அம்மானை,Ammaanai - ஸ்வாமியை
இனி,Ini - இனி
கூவி கூவி,Koovi koovi - பலகாலும் கூப்பிட்டு
எங்கு,Engu - எங்கே
தலைப்பெய்வன்,Thalaippeivan - கிட்டுவேன்?