| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2916 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார்.) 9 | கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9 | கொடு வினை,Kodu vinai - கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய தூற்றுள் நின்று,Thoottrul ninru - நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று பல காலம்,Pala kaalam - அநேக காலம் வழி திகைத்து,Vali thigaiththu - வழி தெரியாமல் சுழன்று அலமருகின்றேன்,Alamarugindren - வருந்திக் கிடக்கின்ற பாவியேன்,Paaviyen - மஹாபாபியான நான் அன்று,Andru - முன்பொருகால் மேவி,Mevi - திருவள்ளமுவந்து ஆநிரை,Aa nirai - பசுக்கூடட்ங்களை காத்தவன்,Kaaththavan - ரக்ஷித்தவனும் உலகம் எல்லாம் தாவிய,Ulagam ellaam thaaviya - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களையெல்லாம் அளந்தவனுமாகிய அம்மானை,Ammaanai - ஸ்வாமியை இனி,Ini - இனி கூவி கூவி,Koovi koovi - பலகாலும் கூப்பிட்டு எங்கு,Engu - எங்கே தலைப்பெய்வன்,Thalaippeivan - கிட்டுவேன்? |