| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2917 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (கீழ்ப்பாட்டில் ஆழ்வார்க்கு ஓடின நிலைமையைக்கண்ட எம்பெருமான் ‘இவரை நாம் ஒருவாறு ஸமாதானப்படுத்தாவிடில் இவர் முடிந்தேவிடுவர்போலும்’ என்றெண்ணித் தான் வடக்குத் திருமலையில் நிற்கும்படியைக் காட்டியருள, ஆழ்வாரும் கண்டு தரித்து, அந்தத் தரிப்பை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார்.) 10 | தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10 | நமன் தமர்,Naman thamar - யமபடர்கள் தலைப்பெய் காலம்,Thalaippei kaalam - வந்து கிட்டுங்காலம் பாசம் விட்டால்,Paasam vittal - காலபாசத்தை வீசினால் அலைப்பூண் உண்ணும்,Alaipoon unnum - (அப்போது) அலைச்சல் படுகையாகிற அவ் அல்லல் எல்லாம் அகல,Av allal ellaam agala - அந்தத் துயரமெல்லாம் நீங்க, பல் கலை ஞானத்து என் கண்ணனை,Pal kalai gnaanaththu en Kannanai - பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களாலே அறியத்தக்க எனது கண்ணபிரானை கண்டுகொண்டு,Kandukondu - காணப்பெற்று என் நெஞ்சம்,En nenjam - எனது மனமானது நிலை பெற்று,Nilai petru - நிலைநிற்கப்பெற்று உயிர்,Uyir - ஆத்மாவும் நீடு பெற்று,Needu petru - நித்யத்வத்தைப் பெற்றதாயிற்று. |