Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2918 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2918திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (இத்திருவாய்மொழி கற்பார, தம்மைப்போலே நோவுபடாதே ஸம்ஸார விமோசனம் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11
எல்லா உயிர்கள்,Ellaa uyirgal - ஸகல ஜீவராசிகளையும்
எல்லா உலகமும்,Ellaa ulagamum - எல்லா உலகங்களையும்
உடையவனை,Udaiyavanai - உடைமையாகக் கொண்டுள்ள எம்பெருமானைக் குறித்து
குயில் கொள் சோலை தென் குருகூர் சடகோபன்,Kuyil kol solai then Kurugur Sadagopan - குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாரருளிய
செயிர் இல்,Seyir il - குற்றமற்ற
சொல்,Sol - சொற்களையுடையத்தாய்
இசை,Isai - இசையோடுங்கூடின
மாலை,Maalai - தொடையையுடைய
ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்திலும்
இ பத்தும்,e paththum - இப் பத்துப்பாட்டும்
உயிரின் மேல்,Uyirin mel - ஆத்மாவின்மேல் வந்தேறியான
ஊன் இடை,Oon idai - மாம்ஸமயமான
ஆக்கை,Aakai - சரீரத்தை
ஒழிவிக்கும்,Ozhivikkum - போக்குவிக்கும்