| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2918 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (இத்திருவாய்மொழி கற்பார, தம்மைப்போலே நோவுபடாதே ஸம்ஸார விமோசனம் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக் குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும் உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11 | எல்லா உயிர்கள்,Ellaa uyirgal - ஸகல ஜீவராசிகளையும் எல்லா உலகமும்,Ellaa ulagamum - எல்லா உலகங்களையும் உடையவனை,Udaiyavanai - உடைமையாகக் கொண்டுள்ள எம்பெருமானைக் குறித்து குயில் கொள் சோலை தென் குருகூர் சடகோபன்,Kuyil kol solai then Kurugur Sadagopan - குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாரருளிய செயிர் இல்,Seyir il - குற்றமற்ற சொல்,Sol - சொற்களையுடையத்தாய் இசை,Isai - இசையோடுங்கூடின மாலை,Maalai - தொடையையுடைய ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்திலும் இ பத்தும்,e paththum - இப் பத்துப்பாட்டும் உயிரின் மேல்,Uyirin mel - ஆத்மாவின்மேல் வந்தேறியான ஊன் இடை,Oon idai - மாம்ஸமயமான ஆக்கை,Aakai - சரீரத்தை ஒழிவிக்கும்,Ozhivikkum - போக்குவிக்கும் |