| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2919 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 1 | ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1 | தெழி குரல் அருவி, Thezhi kural aruvi - கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின திருவேங்கடத்து, Thiruvengadathu - திருவேங்கடமலையில் எழில் கொள், Ezhil kol - நிறம்பெற்ற எந்தை தந்தை தந்தைக்கு, Endhai thandhai thandhaikku - எமது குலநாதனான பெருமானுக்கு, நாம், Naam - அடியோம் ஒழிவு இல், Ozhivu il - ஓய்வில்லாத காலம் எல்லாம், Kaalam ellaam - காலம் முழுவதும் உடன் ஆய், Udan aay - கூடவே யிருந்து மன்னி, Manni - ஸகல அவஸ்தைகளிலும் பிரியாது நின்று வழு இலா, Valu ila - குற்றமற்ற அடிமை, Adimai - கைங்கரியங்களை செய்ய வேண்டும், Seyya vendum - பண்ணக்கடவோம். |