Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2919 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2919திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 1
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1
தெழி குரல் அருவி, Thezhi kural aruvi - கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருவேங்கடமலையில்
எழில் கொள், Ezhil kol - நிறம்பெற்ற
எந்தை தந்தை தந்தைக்கு, Endhai thandhai thandhaikku - எமது குலநாதனான பெருமானுக்கு,
நாம், Naam - அடியோம்
ஒழிவு இல், Ozhivu il - ஓய்வில்லாத
காலம் எல்லாம், Kaalam ellaam - காலம் முழுவதும்
உடன் ஆய், Udan aay - கூடவே யிருந்து
மன்னி, Manni - ஸகல அவஸ்தைகளிலும் பிரியாது நின்று
வழு இலா, Valu ila - குற்றமற்ற
அடிமை, Adimai - கைங்கரியங்களை
செய்ய வேண்டும், Seyya vendum - பண்ணக்கடவோம்.