| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2923 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 5 | சோதி ஆகி,எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ, வேதியர் முழு வேதத்து அமுதத்தைத் தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5 | வேதியர் முழு வேதத்து அமுதத்தை , Vethiyar muzhu vedathu amudhathai - வைதிகர்களால் ஓதப்படுகிற ஸகல வேதங்களிலும் பரம போக்யனாக ப்ரதிபாதிக்கப்படுபவனும் தீது இல் சீர் , Theethu il seer - தீது ஒன்றுமில்லாத திருக்குணங்களை யுடையனுமான திருவேங்கடத்தானை , Thiruvengadathaannai - திருமலையப்பனைக் குறித்து சோதி ஆகி , Sothi aagi - சோதிமயமான திருமேனியையுடையனாய் ஆதி , Aadhi - ஸகலஜகத்காரணபூதனான (எல்லா உலகும் தொழும் உலகத்தவர்களெல்லாராலும் தொழப்படுபவனாய்) மூர்த்தி , Moorthi - ஸர்வேச்வரன் (இவன்) என்றால் , Endraal - என்று நான் சொன்னால் (அது) அளவு ஆகுமோ , Alavu aagumo - ஒரு பெருமை யாகுமோ? |