| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2925 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 7 | சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு. அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7 | மா , Maa - சிறந்த மலர் , Malar - புஷ்பங்களையும் நீர் , Neer - தீர்த்தத்தையும் சுடர் , Sudar - தீபத்தையும் தூபம் , Thoobam - தூபத்தையும் சுமந்துகொண்டு , Sumandhukondu - ஏந்திக்கொண்டு வானவர் , Vaanavar - தேவர்கள் வானவர் கோ னொடும் , Vaanavar konodum - தங்கள் தலைவனோடுகூட அமர்ந்து நமன்று , Amarndu namandru - அநந்யப்ரயோஜநராய் வணங்கி எழும் , Ezhum - உஜ்ஜீவிக்குமிடமான திருவேங்கடம் , Thiruvengadam - திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே நங்கட்கு , Nangatku - நமக்கு சமன் கொள் வீடு , Saman kol veedu - பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை தரும் , Tharum - அளிக்கும். |