திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2926 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 8 | குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.–3-3-8 | பதவுரை Show / Hideகுன்றம் ஏந்தி , Kundram endhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகத் தாங்கிநின்று குளிர் மழை , Kulir mazhai - குளிர்ந்தபெருமழையை காத்தவன் , Kaathavan - தடுத்தவனும் அன்று , Andru - முன்பொரு காலத்தில் ஞாலம் அளந்த பிரான் , Nyaalam alandha piran - உலகங்களையளந்த பிரபுவுமாகிய பரன் , Paran - எம்பெருமான் சென்று சேர் , Sendru ser - வந்து சேர்ந்தவிடமான திருவேங்கட மாமலை ஒன்றமே , Thiruvengata maamalai ondrame - திருமலையொன்றை மாத்திரமே தொழ , Thozha - தொழப்பெறில் நம் வினை , Nam vinai - நமது வினைகள் யாவும் ஓயும் , Ooyum - தொலைந்திடும். |