Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2926 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2926திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 8
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.–3-3-8
குன்றம் ஏந்தி , Kundram endhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகத் தாங்கிநின்று
குளிர் மழை , Kulir mazhai - குளிர்ந்தபெருமழையை
காத்தவன் , Kaathavan - தடுத்தவனும்
அன்று , Andru - முன்பொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் , Nyaalam alandha piran - உலகங்களையளந்த பிரபுவுமாகிய
பரன் , Paran - எம்பெருமான்
சென்று சேர் , Sendru ser - வந்து சேர்ந்தவிடமான
திருவேங்கட மாமலை ஒன்றமே , Thiruvengata maamalai ondrame - திருமலையொன்றை மாத்திரமே
தொழ , Thozha - தொழப்பெறில்
நம் வினை , Nam vinai - நமது வினைகள் யாவும்
ஓயும் , Ooyum - தொலைந்திடும்.