Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2927 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2927திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 9
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9
திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற
ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன
பிறப்பு , Pirappu - பிறவியென்ன
இறப்பு , Irappu - மரணமென்ன
அடி , Adi - திருவடிகளை
வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும்
மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும்
வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு
பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை)
வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை
செய்வான் , Seyvaan - செய்தருள்வன்.