| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2928 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 10 | வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று, எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10 | வைத்த, vaitha - (பாகவதர்களே!) (உங்களுக்குச்) சங்கற்பித்துவைத்த நாள், naal - ஆயுட்காலத்தினுடைய வரை, varai - அளவான எல்லை, ellai - எல்லையானது குறுகி, kurugi - அணுகி எய்த்து இளைப்பதன் முன்னம், eithu ilaipathan munnam - (அதனால் நீங்கள்) மிகவும் தளர்ச்சியடைவதற்கு முன்னே சென்று, sendru - (திருமலையை நோக்கிச் சென்று) பைத்த பாம்பு அணையான், paitha paambu anaiyaan - படமெடுத்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்ட பெருமானது திருவேங்கடம், thiruvengadam - (அத்) திருமலையில் மொய்த்த சோலை , Moitha solai - நெருங்கின சோலைகளும் மொய் பூ தடம் , Moi poo Thadam - நெருங்கின புஷ்கரிணிகளுமுள்ள தாழ்வர் , Thaazhvar - திருத்தாழ்வரையை அடைமின் , Adaimin - அடையுங்கள் |