Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2928 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2928திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 10
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10
வைத்த, vaitha - (பாகவதர்களே!) (உங்களுக்குச்) சங்கற்பித்துவைத்த
நாள், naal - ஆயுட்காலத்தினுடைய
வரை, varai - அளவான
எல்லை, ellai - எல்லையானது
குறுகி, kurugi - அணுகி
எய்த்து இளைப்பதன் முன்னம், eithu ilaipathan munnam - (அதனால் நீங்கள்) மிகவும் தளர்ச்சியடைவதற்கு முன்னே
சென்று, sendru - (திருமலையை நோக்கிச் சென்று)
பைத்த பாம்பு அணையான், paitha paambu anaiyaan - படமெடுத்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்ட பெருமானது
திருவேங்கடம், thiruvengadam - (அத்) திருமலையில்
மொய்த்த சோலை , Moitha solai - நெருங்கின சோலைகளும்
மொய் பூ தடம் , Moi poo Thadam - நெருங்கின புஷ்கரிணிகளுமுள்ள
தாழ்வர் , Thaazhvar - திருத்தாழ்வரையை
அடைமின் , Adaimin - அடையுங்கள்