| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2929 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 11 | தாள் பரப்பி மண் தாவிய ஈசனை, நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல், கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர், வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11 | தாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார் சொல், sol - அருளிச்செய்த கேழ் இல், kezh il - ஒப்பற்றதான ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில் இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள் ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர். |