Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2929 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2929திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 11
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை,
நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல்,
கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11
தாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து
மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட
ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து
நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய
குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார்
சொல், sol - அருளிச்செய்த
கேழ் இல், kezh il - ஒப்பற்றதான
ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில்
இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை
வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள்
ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி
வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று
வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர்.