| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2934 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ரஸம் நிறைந்த பண்டங்களாக இருக்குந்தன்மையை ஆழ்வார் இப்பாட்டில் பாராட்டிக் கூறுகின்றார். “ரஸோவை ஸ: ரஸம்ஹ்யேவாயம் லப்த்வாநந்தீபவதி” என்ற உபநிஷத்து இங்கு ஸ்மரிக்கத்தக்கது) 5 | அச்சுதன் அமலன் என்கோ! அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் என்கோ! நலம்கடல் அமுதம் என்கோ! அச்சுவைக் கட்டி என்கோ! அறுசுவை அடிசில் என்கோ! நெய்ச்சுவைத் தேறல் என்கோ! கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5 | அச்சுதன்,Achuthan - (எம்பெருமானை) அச்சுதன் என்பேனோ? அமலன் என்கோ,Amalan enko - அகிலஹேய ப்ரத்யநீகன் என்பேனோ? அடியவர்,Adiyavar - தன்னடியார்களது வினை,Vinai - புண்ணியபாபமென்கிற இருவினைகளையும் கெடுக்கும்,Kedukkum - போக்குவதும் அ சுவை கட்டி என்கோ,A suvai katti enko - அந்த அமிருதத்தின் உருசியையுடைய கருப்புக் கட்டி யென்போனோ? அறு சுவை அடிசில் என்கோ,Aru suvai adisil enko - அறுவகைச் சுவையும் நிரம்பிய உணவு என்பேனோ? நச்சு,Nachchu - (இனிமைபற்றி) விரும்பப்படுவதுமான மா மருந்தம் என்கோ,Maa marundham enko - சிறந்த ஔஷதமென்பேனோ நலம் கடல் அமுதம் என்கோ,Nalam kadal amudham enko - நல்ல பாற்கடலில் தோன்றிய அம்ருதமென்பேனோ? நெய் சுவை தேறல் என்கோ,Nei suvai therhal enko - நெய்போலுஞ் சுவையையுடைய தேன் என்பேனோ? கனி என்கோ,Kani enko - பழமென்பேனோ? பால் என்கோனோ,Paal enkonoo - பால் என்பேனோ? |