| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2937 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (இந்தவுலகில் பிரதானரான சிவனையும் பிரமனையும் எம்பெருமான் தான் உடைமையாகப் பற்றிருத்தலை ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.) 8 | ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர் மதிச் சடையன் என்கோ! நான் முகக் கடவுள் என்கோ! அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.–3-4-8 | அளி மகிழ்ந்து,Ali magizhndhu - உயிர்களைப் பாதுகாத்தலை விரும்பி உலகம் எல்லாம்,Ulagam ellaam - எல்லா உலகங்களையும் படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து அவை,Avai - அவ்வுலகங்களெல்லாம் ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னைத்) துதிக்கும்படி நிற்கின்றவனும் களி மலர் துன்வன்,Kaliyumalar thunvan - தேனையும் பூவையுமுடைய திருத்துழாய் மாலையை யணிந்தவனும் எம்மான்,Emmaan - எமக்குத் தலைவனும் மாயனை,Maayanai - மாயங்களையுடையவனுமாகிய கண்ணனை,Kannanai - கண்ணபிரானை ஒளி மணிவண்ணன் என்கோ,Oli mani vannan enko - ப்ரகாசமுள்ள மாணிக்கம்போன்ற வடிவையுடையவனென்பேனோ? ஒருவன் என்று,Oruvan endru - ஒப்பற்ற கடவுள் என்று ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னுடைய அடியவர் யாவரும்) துதிக்கும்படி நின்ற நளிர்மதி சடையன் என்கோ,Nalirmathi sadaiyan enko - குளிர்ந்த பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியிலேயுடைய ருத்திரன் என்பேனோ? நான்முகன் கடவுள் என்கோ,Naanmugan kadavul enko - பிரமதேவனெப்பேனோ? |