Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2937 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2937திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (இந்தவுலகில் பிரதானரான சிவனையும் பிரமனையும் எம்பெருமான் தான் உடைமையாகப் பற்றிருத்தலை ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.) 8
ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8
அளி மகிழ்ந்து,Ali magizhndhu - உயிர்களைப் பாதுகாத்தலை விரும்பி
உலகம் எல்லாம்,Ulagam ellaam - எல்லா உலகங்களையும்
படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து
அவை,Avai - அவ்வுலகங்களெல்லாம்
ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னைத்) துதிக்கும்படி நிற்கின்றவனும்
களி மலர் துன்வன்,Kaliyumalar thunvan - தேனையும் பூவையுமுடைய திருத்துழாய் மாலையை யணிந்தவனும்
எம்மான்,Emmaan - எமக்குத் தலைவனும்
மாயனை,Maayanai - மாயங்களையுடையவனுமாகிய
கண்ணனை,Kannanai - கண்ணபிரானை
ஒளி மணிவண்ணன் என்கோ,Oli mani vannan enko - ப்ரகாசமுள்ள மாணிக்கம்போன்ற வடிவையுடையவனென்பேனோ?
ஒருவன் என்று,Oruvan endru - ஒப்பற்ற கடவுள் என்று
ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னுடைய அடியவர் யாவரும்) துதிக்கும்படி நின்ற
நளிர்மதி சடையன் என்கோ,Nalirmathi sadaiyan enko - குளிர்ந்த பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியிலேயுடைய ருத்திரன் என்பேனோ?
நான்முகன் கடவுள் என்கோ,Naanmugan kadavul enko - பிரமதேவனெப்பேனோ?