Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2940 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2940திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (மஹாஜ்ஞாநவான்களான நித்யஸூரிகள் “இருள் தருமா ஞாலமான இந்தப் பிரபஞ்சத்திற பிறந்தும் நம்மைப்போன்ற நன் ஞானத்தைப் பெற்று எம்பெருமானை இவ்வாழ்வார் அநுபவிக்கினறரே!” என்று நம்மாழ்வாரிடத்துத் தாம் கொண்ட பேரன்பினால், ஆழ்வாரருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓதினவர்களிடத்திலும் ப்ரீதி கொண்டு ஸர்வேச்வரனையும் விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பர்களென்க.) 11
கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11
வண்டு,Vandu - வண்டுகள்
கூடி,Koodi - மொய்த்து
அறையும்,Araiyum - (மதுபானத்தினாலுண்டான களிப்பினால்) ரீங்காரஞ் செய்கின்ற
தண் தார் கொண்டல் போல் வண்ணன் தன்னை,Than tar kondal pol vannan thannai - காளமேகச்யாமளனைக் குறித்து
மாடு,Madu - சுற்றுப்பக்கங்களில்
அலர்,Alar - மலர்ந்த
பொழில்,Pozhil - சோலைகளையுடைய
குருகூர்,kurukoor - திருக்குருகூரிலவதரித்த
வள்,Val - ஔதாரியத்தையுடைய
சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார்
சொன்ன,Sonna - பாடியருளிய
பாடல் ஓர் ஆயிரத்துள்,Paadal or aayiratthul - ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்
இவை ஒருபத்தும்,Ivai orupathum - இந்தப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்,Vallar - அறியவல்லார்
வீடு இல போகம் எய்தி,Veedu ila pogam yeythi - இடைவிடுதலில்லாத (நிரந்தரமான) பகவதநுபவத்தைப் பெற்று
அமரர்,Amarar - நித்யஸூரிகளால்
மொய்த்து,Moythu - நெருங்கி
விரும்புவர்,Virumpuvar - விரும்பப்படுவர்.