Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2941 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2941திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த ஆச்ரித வாத்ஸல்யத்தை யநுஸந்தித்தும் விகாரமடையாதிருப்பாருடைய பிறப்பு வீண் என்கிறார்.) 1
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1
தண் கடல் வட்டத்து உள்ளீர்,Tan kadal vattathu ullir - குளிர்ந்த கடல்சூழ்ந்த பூமண்டலத்திலுள்ளவர்களே!
மொய்,Moy - நெருங்கின
மா,Maa - பெரிய
பூ பொழில்,Poo polil - பூஞ்சோலைகளையுடைய
பொய்கை,Poigai - தடாகத்தில்
முதலை,Mudhalai - மதுலையினால்
சிறை பட்டு,Sirai pattu - கவ்வப்பட்டு
கண்ணன் எம்மானை,Kannan emmanai - ஸ்ரீக்ருஷ்ணபரமாத்மாவை
சொல்லி பாடி,Solli paadi - புகழ்ந்து பாடி
எழுந்தும்,Ezhundum - இருந்தவிடித்திலிராமல் எழுந்தும்
நின்ற,Nindra - கரையேறமாட்டாது வருந்தி நின்ற
கை மாவுக்கு,Kai maavukku - கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த,Arul seitha - க்ருபைபண்ணின
கார் முகில் போல் வண்ணன்,Kar mugil pol vannan - காளமேக சியாமளனான
பறந்தும்,Paranthum - பூமியில் கால் பாவாதபடி அலைந்தும்
துள்ளாதார் தம்மால்,Thullaadhaar thammaal - களித்துக் கூத்தாடாதவர்களால்
என் கருமம்,En karumam - என்ன பயன்?
சொல்லீர்,Sollir - சொல்லுங்கள்.