| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2941 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த ஆச்ரித வாத்ஸல்யத்தை யநுஸந்தித்தும் விகாரமடையாதிருப்பாருடைய பிறப்பு வீண் என்கிறார்.) 1 | மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என்? சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1 | தண் கடல் வட்டத்து உள்ளீர்,Tan kadal vattathu ullir - குளிர்ந்த கடல்சூழ்ந்த பூமண்டலத்திலுள்ளவர்களே! மொய்,Moy - நெருங்கின மா,Maa - பெரிய பூ பொழில்,Poo polil - பூஞ்சோலைகளையுடைய பொய்கை,Poigai - தடாகத்தில் முதலை,Mudhalai - மதுலையினால் சிறை பட்டு,Sirai pattu - கவ்வப்பட்டு கண்ணன் எம்மானை,Kannan emmanai - ஸ்ரீக்ருஷ்ணபரமாத்மாவை சொல்லி பாடி,Solli paadi - புகழ்ந்து பாடி எழுந்தும்,Ezhundum - இருந்தவிடித்திலிராமல் எழுந்தும் நின்ற,Nindra - கரையேறமாட்டாது வருந்தி நின்ற கை மாவுக்கு,Kai maavukku - கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்த,Arul seitha - க்ருபைபண்ணின கார் முகில் போல் வண்ணன்,Kar mugil pol vannan - காளமேக சியாமளனான பறந்தும்,Paranthum - பூமியில் கால் பாவாதபடி அலைந்தும் துள்ளாதார் தம்மால்,Thullaadhaar thammaal - களித்துக் கூத்தாடாதவர்களால் என் கருமம்,En karumam - என்ன பயன்? சொல்லீர்,Sollir - சொல்லுங்கள். |