| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2942 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸகல ஜகத்தினுடையவும் துன்பங்களைப்போக்கிக் காத்தருளுமியல்வினனான திருமாலினது இந்நீர்மையில் ஈடுபடமாட்டாதவர்கள் ஸம்ஸார நிலத்தில் மேன்மேலும் பிறந்து படுவர்களென்கிறாரிப்பாட்டில்.) 2 | தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும் திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப் பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார் மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2 | தண் கடல் வட்டத்து உள்ளாரை,Tan kadal vattathu ullaarai - குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமண்டலத்திலுள்ள ஜனங்களை தடிந்து உண்ணும்,Thadinthu unnum - கொன்று தின்கிறவர்களும் திண் கழல் கடால்,Thin kazhal kadal - திண்ணிய வீரக்கழல்களையணிந்த காலையுடையவருமான அசுரர்க்கு,Asurarkku - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு தீங்கு இழைக்கும் திருமாலை,Theengu izhaikkum thirumaalai - அநர்த்தங்களை விளைவிக்கின்ற திருமாலை பண்கள் தலைக்கொள்ள பாடி,Pangal thalaikkolla paadi - இசை மிகும்படி பாடி பறந்தும்,Paranthum - உயரக்கிளம்பியும் குனித்து,Kuniththu - ஆடியும் உழலாதார்,Uzhalaadhaar - எங்கம் திரியாதவர்கள் மண்கொள் உலகில்,Mankol ulagil - மண்ணுலகத்தில் வல் வினைமலைந்து மோத,Val vinaimalaindhu moda - கொடிய பாவங்கள் மேலிட்டு நலியும்படியாக பிறப்பார்,Pirappaar - பிறப்பர்கள் (நித்திய ஸம்ஸாரிகளாய்க் கிடப்பர்களென்றபடி). |