Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2942 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2942திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸகல ஜகத்தினுடையவும் துன்பங்களைப்போக்கிக் காத்தருளுமியல்வினனான திருமாலினது இந்நீர்மையில் ஈடுபடமாட்டாதவர்கள் ஸம்ஸார நிலத்தில் மேன்மேலும் பிறந்து படுவர்களென்கிறாரிப்பாட்டில்.) 2
தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2
தண் கடல் வட்டத்து உள்ளாரை,Tan kadal vattathu ullaarai - குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமண்டலத்திலுள்ள ஜனங்களை
தடிந்து உண்ணும்,Thadinthu unnum - கொன்று தின்கிறவர்களும்
திண் கழல் கடால்,Thin kazhal kadal - திண்ணிய வீரக்கழல்களையணிந்த காலையுடையவருமான
அசுரர்க்கு,Asurarkku - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு
தீங்கு இழைக்கும் திருமாலை,Theengu izhaikkum thirumaalai - அநர்த்தங்களை விளைவிக்கின்ற திருமாலை
பண்கள் தலைக்கொள்ள பாடி,Pangal thalaikkolla paadi - இசை மிகும்படி பாடி
பறந்தும்,Paranthum - உயரக்கிளம்பியும்
குனித்து,Kuniththu - ஆடியும்
உழலாதார்,Uzhalaadhaar - எங்கம் திரியாதவர்கள்
மண்கொள் உலகில்,Mankol ulagil - மண்ணுலகத்தில்
வல் வினைமலைந்து மோத,Val vinaimalaindhu moda - கொடிய பாவங்கள் மேலிட்டு நலியும்படியாக
பிறப்பார்,Pirappaar - பிறப்பர்கள் (நித்திய ஸம்ஸாரிகளாய்க் கிடப்பர்களென்றபடி).