| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2945 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (அடியார்களின் விரோதிகளைத் தொலைப்பதற்காகத் தன்னுடைய அஸாதாரண திவ்ய ரூபத்தோடு கூடவே வந்து திருவவதாரம் பண்ணின திருக்குணத்தை அநுஸந்தித்து ஈடுபடாதவர்கள் செய்கிற ஜபம் தபம் முதலியனவெல்லாம் உபயோகமற்றவையென்கிறார்.) 5 | சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார் ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5 | சாது சனத்தை நலியும்,Saadhu sanaththai naliyum - ஸாத்விகர்களைத் துன்பப்படுத்தின கஞ்சனை,Kanjanai - கம்ஸனை சாதிப்பதற்கு,Saadippadharku - தண்டிக்கும்பொருட்டு ஆதி அம்சோதி உருவை,Aadhi amsoathi uruvai - நித்தியமாய் அப்ராக்ருததேஜோரூபமான திருவுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த,Angu vaiththu ingu pirandha - பரமபதத்திலுள்ளபடியே ஸ்வீகரித்துக்கொண்டு இந்நிலத்தில் வந்து பிறந்தவனும் வேதம் முதல்வனை,Vedam mudhalvanai - வேதங்களினால் மூலப்பொருளென்று ஓதப்படுபவனுமான எம்பெருமானை. பாடி,Paadi - வாயாரப்பாடிக்கொண்டு வீதிகள் தோறும்,Veedhigal thorum - எல்லா வீதிகளிலும் துள்ளாதார்,Thullaadhaar - களித்துத்திரியாதவர்கள் ஓதி உணர்ந்தவர் முன்னா,Oadhi unarnthavar munnaa - சாஸ்திரங்கள் ஓதி நன்கறிந்த மாஞானிகள் முதற்கொண்டு (எப்படிப்பட்ட வித்வான்களாயிருந்தாலும்) என் சவிப்பார்,En savipaar - (அவர்கள்) ஜபம் செய்வது என்னோ? மனிசரே,Manisare - (அவர்கள்) மநுஷ்ய கோடியிற் சேர்ந்தவர்களோ? |