| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2946 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (மநுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளின எம்பெருமானுடைய பரமபோக்யதையை அநுஸந்தித்துப் பரவசராயிருக்குமவர்கள் தாம் எல்லா அறிவின் பலனும் கைவந்திருக்குவமர்களென்கிறாரிப்பாட்டில்.) 6 | மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக் கனியைக் கரும்பின் இன் சாற்றைக்க ட்டியைத் தேனை அமுதை முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6 | மனிசரும்,Manisarum - மநுஷ்ய யோநியாயும் மற்றும்,Matrum - தேவயோநியாயும் முற்றும் ஆய்,Mutrum aai - மற்றுமுள்ள ஸகல யோநியாயும் மாயம் பிறவி பிறந்த,Maayam piravi pirandha - ஆச்சரியமான பிறவிகளில் பறிந்தருளின தனியன்,Thaniyan - ஒப்பற்றவாய் பிறப்பு இலிதன்னை,Pirappu ilithannai - கருமமடியான பிறப்பு இல்லாதவனாய் தடம் கடல் சேர்ந்த பிரானை,Thadam kadal serndha praanai - விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளும் பெருமானாய் கனியை,Kaniyai - கனிபோன்றவனாய் இன் கரும்பின் சாற்றை,In karumbin saatrai - மதுரமான கருப்பஞ்சாறு போன்றவனாய் கட்டியை,Kattiyai - கற்கண்டுபோன்றவனாய் தேனை,Thenai - தேன்போன்றவனாய் அமுதை,Amudhai - அமிருதம் போன்றவனான எம்பெருமானை முனிவு இன்றி,Munivu indri - வெறுப்பு இல்லாமல் மிக்க உவப்புடனே ஏத்தி,Yaethi - துதித்து குனிப்பார்,Kunipaar - நர்த்தனம் செய்பவர்கள் முழுது உணர் நீர்மையினால்,Muzhudhu unar neermaiyinaal - ஸர்வஜ்ஞர்களெனக் கொண்டாடத் தக்கவர்கள் |