Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2946 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2946திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (மநுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளின எம்பெருமானுடைய பரமபோக்யதையை அநுஸந்தித்துப் பரவசராயிருக்குமவர்கள் தாம் எல்லா அறிவின் பலனும் கைவந்திருக்குவமர்களென்கிறாரிப்பாட்டில்.) 6
மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்க ட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6
மனிசரும்,Manisarum - மநுஷ்ய யோநியாயும்
மற்றும்,Matrum - தேவயோநியாயும்
முற்றும் ஆய்,Mutrum aai - மற்றுமுள்ள ஸகல யோநியாயும்
மாயம் பிறவி பிறந்த,Maayam piravi pirandha - ஆச்சரியமான பிறவிகளில் பறிந்தருளின
தனியன்,Thaniyan - ஒப்பற்றவாய்
பிறப்பு இலிதன்னை,Pirappu ilithannai - கருமமடியான பிறப்பு இல்லாதவனாய்
தடம் கடல் சேர்ந்த பிரானை,Thadam kadal serndha praanai - விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளும் பெருமானாய்
கனியை,Kaniyai - கனிபோன்றவனாய்
இன் கரும்பின் சாற்றை,In karumbin saatrai - மதுரமான கருப்பஞ்சாறு போன்றவனாய்
கட்டியை,Kattiyai - கற்கண்டுபோன்றவனாய்
தேனை,Thenai - தேன்போன்றவனாய்
அமுதை,Amudhai - அமிருதம் போன்றவனான எம்பெருமானை
முனிவு இன்றி,Munivu indri - வெறுப்பு இல்லாமல் மிக்க உவப்புடனே
ஏத்தி,Yaethi - துதித்து
குனிப்பார்,Kunipaar - நர்த்தனம் செய்பவர்கள்
முழுது உணர் நீர்மையினால்,Muzhudhu unar neermaiyinaal - ஸர்வஜ்ஞர்களெனக் கொண்டாடத் தக்கவர்கள்