Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2947 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2947திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (அடியவர்களான பாண்டவர்களின் விரோதிகளைப் போக்கின எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுஸந்தித்து ஈடுபடமாட்டார்கள் *பெற்றதாய் வயிற்றினைப் பெருநோய் செய்யவே பிறந்தவர்களென்கிறாரிப்பாட்டில்.) 7
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே!–3-5-7
நீர்மை இல்,Neermai il - ஈர நெஞ்சு இல்லாதவர்களான
நூற்றுவர்,Nootruvar - துரியோதனன் முதலிய நூறு பேரும்
வீய,Vee - மாளும்படியாக,
ஐவர்க்கு,Aivarkku - பஞ்சபாண்டவர்களுக்“கு
அருள் செய்து நின்று,Arul seithu nindru - கிருபை பண்ணி
பார்மல்குசேனை அவிந்த,Paar malgusenai avindha - பூபாரமாயிருந்த சேனைகளைத் தொலைத்தருளின
பரம் சுடரை,Param sudarai - பரஞ்சோதியான பெருமானை
நினைந்து,Ninaindhu - தியானம் பண்ணி
ஆடி,Aadi - கூத்தாடி
நீல் மல்கு கண்ணினர் ஆகி,Neel malgu kanninar aagi - ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களையுடையவராகி
நெஞ்சம் குழைந்து நையாதே,Nenjam kuzhaindhu naiyaadhe - நெஞ்சுருகி நையாமல்
ஊன் மல்கி,Oon malgi - உடல் தடித்த
மோடு பருப்பார்,Modu paruppaar - வயிறு பருப்பவர்கள்
உத்தமர்கட்கு,Utthamar kadku - பாகவதோத்தமர்களுக்கு
என் செய்வார்,En seivaar - யாது செய்வார்.