Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2948 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2948திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸம்ஸாரபூமியில் இருந்துவைத்து எப்போதும் திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களிலீடுபடுமவர்கள் *அயர்வறுமமரர்களிலும் சீரிய ரென்கிறார். இங்கத் திருவேங்கடத்தை யெடுத்து திவ்யதேசங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமாகம்.) 8
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8
வார் புனல் அம் தண் அருவி,Vaar punal am than aruvi - சிறந்த தீர்தங்களையுடையதும் அழகிய குளிர்ந்த அருவிகளையுடையதுமான
வட திருவேங்கடத்து,Vada thiruvengadaththu - வடக்குத் திருமலையில் நிற்கிற
எந்தை,Endhai - எம்பெருமானுடைய
பல பேர்,Pala per - பல திருநாமங்களையும்
சொல்லி பிதற்றி,Solli pidatri - வாய்வந்தபடி சொல்லி
பித்தர் என்றே பிறர் கூற,Pitthar endre pirar kooru - ‘அவர்கள் பைத்தியக்காரர்கள்’ என்றே பிறர் சொல்லுமாறு
ஊர் பல புக்கும்,Oor pala pukkum - பலவூர்களிலே புகுந்தும்
புகாதும்,Pugaadhum - அங்குப் புகாமலும் (பலபேர்களுடைய ஸன்னிதானத்திலும் அஸன்னிதானத்திலும் என்றபடி)
உலோகர் சிரிக்க,Ulogar sirikka - உலகர்கள் சிரிக்கும்படியாக
ஆடிநின்று,Aadininru - நர்த்தனஞ் செய்து கொண்டிருந்து
ஆர்வம் பெருகி,Aarvam perugi - ஆசை விஞ்சி
குனிப்பர்,Kunippar - கோலாஹலஞ் செய்பவர்கள்
அமரர்,Amarar - நித்யஸூரிகளாலே
தொழப்படுவார்,Thozhappaduvaar - வணங்கப்படுவர்கள்.