| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2948 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸம்ஸாரபூமியில் இருந்துவைத்து எப்போதும் திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களிலீடுபடுமவர்கள் *அயர்வறுமமரர்களிலும் சீரிய ரென்கிறார். இங்கத் திருவேங்கடத்தை யெடுத்து திவ்யதேசங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமாகம்.) 8 | வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8 | வார் புனல் அம் தண் அருவி,Vaar punal am than aruvi - சிறந்த தீர்தங்களையுடையதும் அழகிய குளிர்ந்த அருவிகளையுடையதுமான வட திருவேங்கடத்து,Vada thiruvengadaththu - வடக்குத் திருமலையில் நிற்கிற எந்தை,Endhai - எம்பெருமானுடைய பல பேர்,Pala per - பல திருநாமங்களையும் சொல்லி பிதற்றி,Solli pidatri - வாய்வந்தபடி சொல்லி பித்தர் என்றே பிறர் கூற,Pitthar endre pirar kooru - ‘அவர்கள் பைத்தியக்காரர்கள்’ என்றே பிறர் சொல்லுமாறு ஊர் பல புக்கும்,Oor pala pukkum - பலவூர்களிலே புகுந்தும் புகாதும்,Pugaadhum - அங்குப் புகாமலும் (பலபேர்களுடைய ஸன்னிதானத்திலும் அஸன்னிதானத்திலும் என்றபடி) உலோகர் சிரிக்க,Ulogar sirikka - உலகர்கள் சிரிக்கும்படியாக ஆடிநின்று,Aadininru - நர்த்தனஞ் செய்து கொண்டிருந்து ஆர்வம் பெருகி,Aarvam perugi - ஆசை விஞ்சி குனிப்பர்,Kunippar - கோலாஹலஞ் செய்பவர்கள் அமரர்,Amarar - நித்யஸூரிகளாலே தொழப்படுவார்,Thozhappaduvaar - வணங்கப்படுவர்கள். |