| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2949 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (கைவல்ய புருஷார்த்தத்தில் ஊன்றியிருப்பவர்கள் தவிர மற்றையோரெல்லோரும் ப்ரேம பரவசராய் எம்பெருமானுடைய குணாநுபவம் பண்ணிக் களித்துக் கூத்தாடுவதே செய்யத்தக்கது என்கிறாரிப்பாட்டில்- என்கிறவிதுவே திருக்குருகைப்பிரான் பின்னான் முதலான ஆசிரியர்களின் திருவுள்ளம்.) 9 | அமரர் தொழப் படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக அமரத் துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே .–3-5-9 | அமரர்,Amarar - நித்யஸூரிகளினால் தொழப் படுவானை,Thozhap paduvaanai - ஸேவிக்கப்படுகிறவனும் அனைத்து உலகுக்கும் பிரானை,Anaithu ulagukkum piraanai - ஸகல லோகங்களுக்கும் சேஷியுமான ஸர்வேச்வரனை மனத்தினுள் அமர,Manathinul amar - நெஞ்சிலே ஊன்றி யிருக்கும்படி யோக புணர்ந்து,Yoga punarndhu - யோகாப்யாஸத்தைப் பண்ணி அவன் தன்னோடு ஒன்றாக அமர,Avan thannodu ondraaga amar - (முக்தி தசையில்) அவனோடு இம்வாத்ம வஸ்து ஸமானம் என்னும்படியாக துணிய வல்லார்கள் ஒழிய,Thuniya vallaarkal ozhiya - கருதமவர்களான கைவல்ய நிஷ்டர்களைத் தவிர அல்லாதவர் எல்லாம்,Allaadhavar ellaam - மற்ற பேர்களெல்லாரும் அமர,Amarar - அநந்யப்ரயோஜனராய்க் கொண்டு நினைந்து எழுந்து ஆடி,Ninaindhthu ezhundhu aadi - (அவனை) நெஞ்சிலே யநுஸந்தித்து எங்கும் பரந்து கூத்தாடி அலற்றுவதே கருமம்,Alattruvadhe karumam - (துதிகளை) வாய் பிதற்றுவதே செய்ய வுரியது. |