Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2949 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2949திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (கைவல்ய புருஷார்த்தத்தில் ஊன்றியிருப்பவர்கள் தவிர மற்றையோரெல்லோரும் ப்ரேம பரவசராய் எம்பெருமானுடைய குணாநுபவம் பண்ணிக் களித்துக் கூத்தாடுவதே செய்யத்தக்கது என்கிறாரிப்பாட்டில்- என்கிறவிதுவே திருக்குருகைப்பிரான் பின்னான் முதலான ஆசிரியர்களின் திருவுள்ளம்.) 9
அமரர் தொழப் படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே .–3-5-9
அமரர்,Amarar - நித்யஸூரிகளினால்
தொழப் படுவானை,Thozhap paduvaanai - ஸேவிக்கப்படுகிறவனும்
அனைத்து உலகுக்கும் பிரானை,Anaithu ulagukkum piraanai - ஸகல லோகங்களுக்கும் சேஷியுமான ஸர்வேச்வரனை
மனத்தினுள் அமர,Manathinul amar - நெஞ்சிலே ஊன்றி யிருக்கும்படி
யோக புணர்ந்து,Yoga punarndhu - யோகாப்யாஸத்தைப் பண்ணி
அவன் தன்னோடு ஒன்றாக அமர,Avan thannodu ondraaga amar - (முக்தி தசையில்) அவனோடு இம்வாத்ம வஸ்து ஸமானம் என்னும்படியாக
துணிய வல்லார்கள் ஒழிய,Thuniya vallaarkal ozhiya - கருதமவர்களான கைவல்ய நிஷ்டர்களைத் தவிர
அல்லாதவர் எல்லாம்,Allaadhavar ellaam - மற்ற பேர்களெல்லாரும்
அமர,Amarar - அநந்யப்ரயோஜனராய்க் கொண்டு
நினைந்து எழுந்து ஆடி,Ninaindhthu ezhundhu aadi - (அவனை) நெஞ்சிலே யநுஸந்தித்து எங்கும் பரந்து கூத்தாடி
அலற்றுவதே கருமம்,Alattruvadhe karumam - (துதிகளை) வாய் பிதற்றுவதே செய்ய வுரியது.