| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2950 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (பகவத்குணங்களைக் கேட்டால் விகாரப்படாமலிருக்கு மிருப்பாகிற அவிவேகத்தைத் தவிர்த்து எல்லீரும் அவனது திருக்குணங்களை யநுஸந்தித்துப் பரவசமாய் லஜ்ஜாபிமானங்களைவிட்டு அவனை ஏத்துங்கோ ளென்கிறாரிப்பாட்டில்) 10 | கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத் திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10 | கருமமும்,Karumamum - ஸாதந ரூபமான கர்மங்களும் கரும பலனும்,Karuma palanum - அக்கருமங்களால் ஸாதிக்கப்படும் பலன்களும் ஆகிய,Aagiya - தானிட்ட வழக்காம்படியுள்ள காரணன் தன்னை,Kaaranan thannai - ஜகத்காரண பூதனும் திரு மணிவண்ணனை,Thiru manivanai - அழகிய மணிபோன்ற வடிவையுடையவனும் செம் கண்,Sem kan - செந்தாமரøக் கண்களையுடையனும் மாலினை,Maalinai - ஆச்ரித வாத்ஸல்யமே வடிவெடுத்தவனும் தேவபிரானை,Devapiranai - தேவர்களுக்குப் பிரானுமான எம்பெருமானை ஒருமை,Orumai - உபாய உபேயங்களில் பேதம் பிறவாதபடி ஒருமைப்பட மனத்தினுள் வைத்து,Manathinulai vaithu - நெஞ்சிலே வைத்து உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - மனமுருகி பெருமையும் நாணும் தவிர்த்து,Perumaiyum naanum thavirthu - அஹங்காரமும் வெட்கமும் இன்றிக்கே எழுந்து ஆடி,Ezhundhu aadi - கிளம்பிக் கூத்தாடி பேதைமை தீர்ந்து,Pethaimai theerndhu - அவிவேகமுமொழிந்து பிதற்றுமின்,Pithattrumin - (அவன் குணங்களை) வாய்வந்தபடி சொல்லுங்கள். |