| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2951 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு பகவத்குணாநுஸந்தானத்தினால் ஒரு விகாரம் பிறவாமையாகிற மஹா பாபத்தை இதுதானே போக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல ஆர்த்த புகழ்அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன் நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே.–3-5-11 | தீர்ந்த,Theerndha - தனக்கே அற்றுத் தீர்ந்த அடியவர்,Adiyavar - விரோதிகள் அற ஸ்வீகரித்து பணி கொள்ள வல்ல,Pani kolla vala - (அவர்கள் மூலமாக) நித்திய கைங்கரியத்தைக் கொள்ள வல்லவனும் ஆர்ந்த புகழ்,Aarndha pugazh - நிறைந்த புகழுடையவனும் அச்சுதனை,Acchudhanai - அச்யுத னென்னும் திருநாமமுடையவனும் அமரர் பிரானை,Amarar piranaai - தேவர்களுக்கு ப்ரபுவுமான எம்மானை,Emmaanai - எம்பெருமாளை வாய்ந்த,Vaaindha - கிட்டின வளம் வயல் சூழ் தண்வளம்,Valam vayal sooal thanvalam - வளம் வயல் சூழ் தண்வளம் குருகூர் சடகோபன்,kurukoor Sadagopan - திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வார் நேர்ந்த,Neerndha - அருளிச் செய்த ஓர் ஆயிரத்து,Oar aayiraththu - ஆயிரத்துள் இ பத்து,I pattu - இத்திருவாய்மொழி அரு வினை,Aru vinai - போக்கவரிய பாவங்களை நீறு செய்யும்,Neeru seyyum - பஸ்மமாக்கிவிடும். |