Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2951 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2951திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு பகவத்குணாநுஸந்தானத்தினால் ஒரு விகாரம் பிறவாமையாகிற மஹா பாபத்தை இதுதானே போக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே.–3-5-11
தீர்ந்த,Theerndha - தனக்கே அற்றுத் தீர்ந்த
அடியவர்,Adiyavar - விரோதிகள் அற ஸ்வீகரித்து
பணி கொள்ள வல்ல,Pani kolla vala - (அவர்கள் மூலமாக) நித்திய கைங்கரியத்தைக் கொள்ள வல்லவனும்
ஆர்ந்த புகழ்,Aarndha pugazh - நிறைந்த புகழுடையவனும்
அச்சுதனை,Acchudhanai - அச்யுத னென்னும் திருநாமமுடையவனும்
அமரர் பிரானை,Amarar piranaai - தேவர்களுக்கு ப்ரபுவுமான
எம்மானை,Emmaanai - எம்பெருமாளை
வாய்ந்த,Vaaindha - கிட்டின
வளம் வயல் சூழ் தண்வளம்,Valam vayal sooal thanvalam - வளம் வயல் சூழ் தண்வளம்
குருகூர் சடகோபன்,kurukoor Sadagopan - திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வார்
நேர்ந்த,Neerndha - அருளிச் செய்த
ஓர் ஆயிரத்து,Oar aayiraththu - ஆயிரத்துள்
இ பத்து,I pattu - இத்திருவாய்மொழி
அரு வினை,Aru vinai - போக்கவரிய பாவங்களை
நீறு செய்யும்,Neeru seyyum - பஸ்மமாக்கிவிடும்.