| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2954 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (கீழ்பாசுரத்தில் ப்ரஸ்தாவித்த இராமபிரானிற்காட்டிலும் எளியனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருளின கண்ண பிரானை ஆச்ரயிக்கப் பாருங்களென்கிறார்.) 3 | பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக் குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை அரவம் ஏறி அலைகடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3 | வானவர்,Vaanavar - தேவர்கள் பரவி ஏத்த நின்ற,Paravi yetha nindra - வாயாரத் துதிக்கும்படி அமைந்த பரனை,Paranaai - பராத்பரனாய் பரம் சோதியை,Param sothiyai - மேலான ஒளியுருவனாய் குரவை கோத்த,Kuravai kotha - (கோபிமார்களோடு) ராஸக்ரீடை செய்த குழகனை,Kulzaganai - ரஸிகனாய் மணிவண்ணனை,Manivannanai - நீலமணிவண்ணனை குடக்கூத்தனை,Kudakkoothanai - குடக்வத்தாடினவனாய் அரவம் ஏறி,Aravam aeri - சேஷசயனத்தின் மீதேறி அலை கடல்,Alai kadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலில் அமரும் துயில் கொண்ட,Amarum thuyil konda - பொருத்தமான நித்திரையைக் கொண்டவனான அண்ணலை,Annalai - பெருமானை நல் இரவும் பகலும்,Nal iravum pagalum - நல்ல இரவும் பகலும் விடாது,Vidaathu - இடையறாமல் என்றும் ஏத்துதல்,Endrum yaethudhal - எந்நாறம் தோத்திரம் பண்ணுதலில் மனம் வைம்மின்,Manam vaimmin - சிந்தை செலுத்துங்கள். |