Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2955 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2955திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மிகவும் அபிமாந யுக்தர்களான பிரமன் சிவன் முதலானரும் தடையின்றியே வந்து பணியலாம்படி யிருக்கிற எம்பெருமானுடைய சீலாதிசயத்தைப் பேசுகிறார்) 4
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும்
வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4
நும் மனத்து,Num manaththu - உங்கள் நெஞ்சிலே
வைம்மின் என்று,Vaimmin endru - வையுங்கள் என்று
யான் உரைக்கின்ற,Yaan uraikindra - என்னால் சொல்லப்படுகின்ற
மாயவன்,Maayavan - மாயோனுடைய
சீர்மையை,Seermaiyai - சீல குணத்தை
எம்மனோர்கள்,Emmanorkal - என்னைப் போன்றவர்கள்
உரைப்பது என்,Uraippadhu en - சொல்லுவது என்னோ?
அது நிற்க,Adhu nirka - அது கிடக்க:
வானவர் தம்மை ஆளுமவனும்,Vaanavar thamai aalumavanum - தேவர்களை ஆள்பவனான இந்திரனும்
நான்முகனும்,Naanmuganum - பிரமனும்
சடை முடி அண்ணலும்,Sadai mudi annalum - ஜடாதரக் கடவுளான சிவனும்
செம்மையால்,Semmaiyaal - முறைமை தவறாது
பாத பங்கயம்,Padha pankayam - திருவடித் தாமரைகளை
நாள்தொறும்,Naaldhorum - எப்போதும்
சிந்தித்து,Sindhiththu - சிந்தனை செய்து
ஏத்தி,Yaethi - துதித்து
திரிவர்,Thirivar - இதுவே காரியமாக இருப்பர்.