| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2957 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (ஆச்ரித விஷயத்தில் எல்லை கடந்த வாத்ஸல்யமுடைய நரஸிம்ஹ மூர்த்தியை யொழிய மற்றொருவரை யானுடையேனல்லேனென்கிறார்) 6 | தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச் சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால் நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர் ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6 | தோற்றம் கேடு அவை,Thotram kedu avai - ஜனன மரணங்களாகிற அவைகள் இல்லவன்,Illavan - இல்லாதவனும் உடையான்,Udaiaan - அவற்றையுடையவனும் அவன்,Avan - ப்ரமாண ப்ரஸித்தனும், ஒரு மூர்த்தி ஆய்,Oru moorthi aai - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய் சீற்றத்தோடு அருள் பெற்றவன்,Seetrathodu arul petravan - சீறியிருக்கும் நிலைமையிலேயே கருணைக்கு இலக்கான ப்ரஹ்லாதன் அடி கீழ் புக நின்ற,Adi keezh puga nindra - தன் திருவடிவாரத்தில் கூசாது நிற்கப்பெற்றவனும், செம் கண் மால்,Sem kan maal - சிவந்த திருக்கண்களையும் ஆச்ரித பக்ஷபாதத்தையுமுடையவனும் நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற,Naatram thotram suvai oli ural aagi nindra - கந்தம் ரூபம் ரஸம் சப்தம் ஸ்பர்சம் என்கிற பஞ்ச விஷயங்களுமாய் நிற்பவனும் எம் வானவர் ஏற்றையே அன்றி,Em vaanavar yetriyai andri - தேவாதி தேவனுமான எம்பெருமானையே யன்றி எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லாக் காலத்திலும் மற்று ஒருவரை,Matru oruvarai - வேறொருவரை யான் இலேன்,Yaan ilein - நான் புகலாகவுடையேனல் லேன் |