| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2958 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் இப்படி ஆச்ரித ஸுலபனாகையாலே அவன் பக்கலில் நீங்கள் பண்ணின துர்லபத்வ சங்கையைத் தவிர்த்து அவனை ஆச்ரயியுங்கள்; உங்கள் துயரங்கள் தொலைந்து போம் என்கிறார்.) 7 | எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர் கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத் தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7 | எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லா நிலைமைகளிலும் எனது ஆவிக்கு,Enadhu aavikku - என் ஆத்மாவுக்கு இன் அமுதத்தினை,In amudhathinai - இனிய அங்குதம் போன்வனும் எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - என்னுடைய அருமையான உயிரோடே கெழுமிய,Kezhumiya - கலந்து நிற்கிற கதிர் சோதியை,Kathir sothiyai - பரஞ்சோதியுருவனும் மணி வண்ணனை,Mani vannanai - நீலமணி நிறத்தனும் குடக் கூத்தனை,Kudak koothanai - குடக் கூத்தாடினவனும் விழுமிய அமரர்,Vizhumiya amarar - சிறந்த தேவர்களாலும் முனிவர்,Munivar - முனிவர்களாலும் விழுங்கும்,Vizhungum - அநுபவிக்கப்படுகிற கன்கல் கனியினை,Kankal kaniyinai - கன்னற்கனி போன்றவனுமான எம்பெருமானை தூய மனத்தர் ஆய்,Thooaya manathar aai - அழுக்கற்ற மனமுடையீர்களாய் தொழுமின்,Thozhumin - தொழுங்கள் (தொழுதால்) துயரங்கள்,Thuyarangal - துன்பங்களானவை இறையும்,Iraiyum - சிறிதேனும் நில்லா,Nillaa - நிற்கமாட்டா. |