Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2958 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2958திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் இப்படி ஆச்ரித ஸுலபனாகையாலே அவன் பக்கலில் நீங்கள் பண்ணின துர்லபத்வ சங்கையைத் தவிர்த்து அவனை ஆச்ரயியுங்கள்; உங்கள் துயரங்கள் தொலைந்து போம் என்கிறார்.) 7
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7
எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லா நிலைமைகளிலும்
எனது ஆவிக்கு,Enadhu aavikku - என் ஆத்மாவுக்கு
இன் அமுதத்தினை,In amudhathinai - இனிய அங்குதம் போன்வனும்
எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - என்னுடைய அருமையான உயிரோடே
கெழுமிய,Kezhumiya - கலந்து நிற்கிற
கதிர் சோதியை,Kathir sothiyai - பரஞ்சோதியுருவனும்
மணி வண்ணனை,Mani vannanai - நீலமணி நிறத்தனும்
குடக் கூத்தனை,Kudak koothanai - குடக் கூத்தாடினவனும்
விழுமிய அமரர்,Vizhumiya amarar - சிறந்த தேவர்களாலும்
முனிவர்,Munivar - முனிவர்களாலும்
விழுங்கும்,Vizhungum - அநுபவிக்கப்படுகிற
கன்கல் கனியினை,Kankal kaniyinai - கன்னற்கனி போன்றவனுமான எம்பெருமானை
தூய மனத்தர் ஆய்,Thooaya manathar aai - அழுக்கற்ற மனமுடையீர்களாய்
தொழுமின்,Thozhumin - தொழுங்கள் (தொழுதால்)
துயரங்கள்,Thuyarangal - துன்பங்களானவை
இறையும்,Iraiyum - சிறிதேனும்
நில்லா,Nillaa - நிற்கமாட்டா.