Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2959 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2959திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மற்றுள்ளாரும் தம்முடைய பக்ஷத்தை யறிந்து ருசி பண்ணுகைக்காக ‘நான் சக்ரவர்த்தி திருமகனை யல்லது மற்றொருவரை ஆபத் தனமாகப் பற்றி யிரேன்’ என்று தமது உறுதியை வெளியிடுகிறார்.) 8
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8
துயரமே தரு,Thuyarame tharu - பரிதாபத்தையே தாக்கடவதான
துன்பம் இன்பம் ஆய்,Thunbam inbam aai - புண்யாபாபரூப கருமங்களுக்கு நியாயமகான்
அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவற்றுக்குத்தான் வசப்படாதவனாய்
உயர நின்றது ஓர் சோதி ஆய்,Uyara nindradhu or sothi aai - உயர்ந்த நிலமாகிய பரமபதந்தனில் லெழுந்தருளி யிருக்கின்ற விலக்ஷண தேஜோமய விக்ரஹ யுக்தனாய்
உலகு ஏழும்,Ulagu ezhum - எல்லா உலகங்களையும்
உண்டு உமிழ்ந்தான் தன்னை,Undu umizhndhaan thannai - (பிரளயத்தில்) உண்டு (மீண்டும்) வெளிப்படுத்தி ரக்ஷிப்பவனாய்
அயர வாங்கும்,Ayara vaangum - மோஹிக்கும்படி உயிரை அபஹரிக்கின்ற
நமன் தமர்க்கு,Naman thamarkku - யமபடர்களுக்கு
அரு நஞ்சினை,Aru nanjinai - மீட்கமுடியாத விஷமாய்
அச்சுதன் தன்னை,Acchuthan thannai - (தன்னைப் பணிந்தாரை) நழுவ விடாதவனாய்
தயரதற்கு மகன் தன்னை அன்றி,Thayaratharku magan thannai andri - சக்ரவர்த்தி திருமகனான எம்பெருமானை வல்லது
மற்று,Matru - மற்றொரு தெய்வத்தை
தஞ்சம் ஆக இலேன்,Thanjam aaga ilein - சரணமாகவுடையேனல்லேன்.