| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2959 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மற்றுள்ளாரும் தம்முடைய பக்ஷத்தை யறிந்து ருசி பண்ணுகைக்காக ‘நான் சக்ரவர்த்தி திருமகனை யல்லது மற்றொருவரை ஆபத் தனமாகப் பற்றி யிரேன்’ என்று தமது உறுதியை வெளியிடுகிறார்.) 8 | துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய் உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8 | துயரமே தரு,Thuyarame tharu - பரிதாபத்தையே தாக்கடவதான துன்பம் இன்பம் ஆய்,Thunbam inbam aai - புண்யாபாபரூப கருமங்களுக்கு நியாயமகான் அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவற்றுக்குத்தான் வசப்படாதவனாய் உயர நின்றது ஓர் சோதி ஆய்,Uyara nindradhu or sothi aai - உயர்ந்த நிலமாகிய பரமபதந்தனில் லெழுந்தருளி யிருக்கின்ற விலக்ஷண தேஜோமய விக்ரஹ யுக்தனாய் உலகு ஏழும்,Ulagu ezhum - எல்லா உலகங்களையும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,Undu umizhndhaan thannai - (பிரளயத்தில்) உண்டு (மீண்டும்) வெளிப்படுத்தி ரக்ஷிப்பவனாய் அயர வாங்கும்,Ayara vaangum - மோஹிக்கும்படி உயிரை அபஹரிக்கின்ற நமன் தமர்க்கு,Naman thamarkku - யமபடர்களுக்கு அரு நஞ்சினை,Aru nanjinai - மீட்கமுடியாத விஷமாய் அச்சுதன் தன்னை,Acchuthan thannai - (தன்னைப் பணிந்தாரை) நழுவ விடாதவனாய் தயரதற்கு மகன் தன்னை அன்றி,Thayaratharku magan thannai andri - சக்ரவர்த்தி திருமகனான எம்பெருமானை வல்லது மற்று,Matru - மற்றொரு தெய்வத்தை தஞ்சம் ஆக இலேன்,Thanjam aaga ilein - சரணமாகவுடையேனல்லேன். |