Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2960 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2960திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தி லெழுந்தருளியிருக்குமிருப்பு எங்களுக்கு உபயோகப்படுவதன்று; ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் பண்ணின காலத்தில் நாங்கள் அணுகியிருந்து வாழப்பெற்றிலோம்; ஆனபின்பு எங்ஙனே அவனைக் கண்டு ஆச்ரயிக்கும்படி?’ என்று ஸம்ஸாரிகள் வினவுவதாகக் கொண்டு, அவர்களுக்கு உத்தரமுரைக்கிறார்; நீங்கள் ஏதேனுமொருபடி உகந்தருளப்பண்ணி ஆச்ரயிப்பது; அத்திருமேனியையே அப்ராக்ருத திவ்யஸம்ஸ்தானமாக விரும்பியருளக் குறையில்லை யென்கிறார். இப்பதிகத்திற்கு இப்பாசுரமே உயிராயிருக்கும். இப்பாட்டின் பிரமேயத்திற்கு அவதாரிகை போன்றனவே கீழ்ப்பாசுரங்கள்.) 9
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9
உலகத்து உள்ளீர்கள்,Ulagathu ullirgal - உலகத்தவர்களே!
தஞ்சம் ஆகிய,Thanjam aagiya - ரக்ஷிக்குந் தன்மை பொருந்திய தந்தையும்
தந்தையொடு,Thandaiyodu - தந்தையும்
தாய்தானும் ஆய்,Thaithanum aai - தாயுமாய்
அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவ்வளவோடும் நில்லாத ஸகலவித பந்துவுமாய்
எஞ்சல் இல்,Enjal il - (பகவதநுபவத்தில்) குறைதல் இல்லாத
அமரர் குலம்,Amarar kulam - நித்யஸூரிகளின் திரளுக்கு
முதல்,Mudhal - தலைவனாய்
மூவர் தம் உள்ளும்,Moovar tham ullamum - மும்மூர்த்திகளுக்கும்
ஆதியை,Aadhiyai - முதல்வனான எம்பெருமானைக் குறித்து
நீர்,Neer - நீங்கள்
அஞ்சி,Anji - மேன்மை கண்டு கலங்கி
அவன் இவன் என்று,Avan ivan endru - எல்லை கடந்த மஹிமையையுடைய அந்த எம்பெருமான் வேறு, இந்த அர்ச்சாரூபாயான எம்பெருமான் வேறு என்று கொண்டு
கூழேல்மின்,Koolzelmin - கலங்கியிருக்க வேண்டா;
நெஞ்சினால்,Nenjinal - நெஞ்சாலே
நினைப்பான் யவன்,Ninaippan yavan - நினைந்து உகந்தருள்விக்கப்பட்டவன் யாவன்
அவன்,Avan - அவனே
நீள் கடல் வண்ணன் ஆகும்,Neel kadal vannan aagum - விசாலமான கடல்போன்ற நிறத்தையுடைய ஸர்வேச்வரனாவன்