Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2961 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2961திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (ஆழ்வார் தாம் உபதேசிக்கத் தொடங்கின ஸௌலப்ய காஷ்டையை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச் செய்து முடித்து, தாம் அகப்பட்ட துறையான க்ருஷ்ணாவதாரத்தை அநுபவிக்க ஆசைப்படுகிறாரிப்பாட்டில். இவ்வாழ்வார் அச்ச்சாவதார ஸௌலப்ய மறிந்திருக்கச் செய்தேயும் க்ருஷ்ணாவதாரத்திலே எத்திறம்! என்று மோஹிக்கு மியல்வினராதலால் அவ்வவதாரந்தன்னிலேயே இப்போதிவர் ஈடுபட்டுப் பேசுவதும் பொருந்தும்.) 10
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10
கடல் வண்ணன்,Kadal vannan - கடல் போன்ற நிறத்தையுடையவனாயும்
கண்ணன்,Kannan - கண்ணபிரானாயும்
விண்ணவர்,Vinnavar - பரமபத்திலுள்ளவர்கட்கு
கரு மாணிக்கம்,Karu manikkam - நீலமணிபோலே போக்யனாயும்
எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - எனது அருமையான உயிராயும்
படம் அரவு இன் அணை கிடந்த,Padam aravu in anai kidandha - படங்களையுடைய ஆதி சேஷனாகிற இனிய படுக்கையில் சயனித்த
பரம் சடர்,Param sudar - பரஞ்சோதியாயும்
பண்டு,Pandu - முன்பொருகால்
அட,Ada - கொல்வதற்காக
வரும்,Varum - திரண்டு வருகின்ற
நூற்றவர் படை,Nootruvar padai - துரியோதனாதிகளின் சேனை
மங்க,Manka - தொலையும்படியாக
ஐவர்கட்கு ஆகி,Aivarkadku aagi - பாண்டவ பக்ஷபாதியாகி
வெம் சமத்து,Vem samathu - கொடிய பாரத யுத்தத்தில்
அன்று,Andru - பகைவர் மேலிட்டு வந்த அந்நாளில்
தேர் கடவிய,Ther kadaviya - (அர்ஜுநனுக்குத்) தேர் செலுத்திய
பெருமான்,Perumaan - பெருமானாயுமிருக்கின்ற எம்பெருமானுடைய
கனை,Kanai - (வீரத்தண்டையினால்) ஒலிக்கின்ற
கழல்,Kazhal - திருவடிகளை
கண்கள் காண்பது,Kangal kaanbadhu - (என்) கண்கள் ஸேவிக்கப் பெறுவது
என்று கொல்,Endru kol - என்றைக்கோ!.