Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2962 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2962திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (இத்திருவாய்மொழியை ஓத, பழுதில்லாத பக்தியுடையராகை திண்ணம்; ஆனபின்பு இத்திருவாய்மொழியை ஓதுங்கள் என்கிறார்) 11
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11
கண்கள் காண்டற்கு,Kangal kaandarku - கண்களால் பார்ப்பதற்கு
அரியன் ஆய்,Ariyan aai - அருமைப்பட்டவனாகி
கருத்துக்கு,Karuthukku - தியானத்திற்கு
நன்றும் எளியன் ஆய்,Nandrum eliyan aai - மிகவும் சுலபனாய்
மண் கொள் ஞாலத்து,Man kol gnaalathu - பூமண்டலத்திலுள்ள
உயிர்க்கு எல்லாம்,Uyirkku ellaam - பிராணிகளுக்கெல்லாம்
அருள் செய்யும்,Arul seyyum - (அர்ச்சாவதார முகத்தாலே) க்ருபைபண்ணுகிற
வானவர் ஈசனை,Vaanavar esanai - தேவாதிதேவனைக் குறித்து,
பண் கொள் சோலை,Pan kol solai - (வண்டு முதலியவற்றின்) இசைமிகுந்த சோலைகளையுடைய
வழுதி நாடன்,Vazhudi naadan - திருவழுதி நாட்டை யுடையராய்
குருகை கோன்,Kurugai kon - திருநகரிக்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்த
பண் கொள் ஆயிரத்து,Pan kol aayirathu - ராகப்ரதாநமான இவ்வாயிரத்தினுள்ளும்
இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால்
பத்தார் ஆக கூடும்,Paththaar aaga koodum - பக்தியை யுடையவராகக் கூடும்:
பயிலுமின்,Payilumin - (ஆதலால் இப்பதிகத்தை) அப்யஸியுங்கோள்.