திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2963 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2963திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரேனுமாகிலும் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்) 1
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப் பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப் பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1
பதவுரை Show / Hide
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை,Payilum sudar oli moorthiyai - செறிந்த சுடர்ச் சோதி யுருவனாய்
பங்கயம் கண்ணனை,Pangayam kannanai - தாமரை போன்ற திருக்கண்களையுடையனாய்
பயில இனிய,Payila iniya - பழகப் பழகப் பரம போக்யனாய்
நம் பால் கடல் சேர்ந்த பரமனை,Nam paal kadal serndha paramanai - நமக்காகத் திருப்பாற் கடலில் துயில் கொண்டிருளும் பரம புருஷனான எம்பெருமானை
பயிலும் திரு உடையார்,Payilum thiru udaiyaar - நிரந்தராநுபவம் பண்ணுகையாகிற செல்வமுடையவர்கள்
யவர் ஏனும்,Yavar enum - எது பிறப்பு ஏதியல்வாக நின்றவரானாலும்
அவர்,Avar - அவர்களே
பயிலும் பிறப்பிடை தோறும்,Payilum pirappidai thorum - மேன்மேலும் நேர்கின்ற பிறவிகள் தோறும்
எம்மை,Emmai - நம்மை
ஆளும்,Aalum - அடிமைகொள்ளவில்லை
பரமர் கண்டீர்,Paramar kandir - மஹான்களாவர்.