Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2964 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2964திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமியான ஸ்வாமிகளென்கிறார்.) 2
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2
ஆளும் பரமனை,Aalum paramanai - ஆள்கின்ற பரம புருஷனாயும்
கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாயும்
ஆழி பிரான் தன்னை,Aazi praan thannai - திருவாழியாழ்வானை யுடைய உபகாரகனாயும்
ஓர் நான்கு தோளும் உடை,Or naangu tholum udai - ஒப்பற்ற நான்க புஜங்களையுடையவனாயும்
தூ மணி வண்ணன்,Thoomani vannan - பரிசுத்தமான நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனாயுமிருக்கின்ற
எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை
தாளும் தடக்கையும் கூப்பி,Thaalum thadakkaiyum koopi - கால்களையும் கைகளையும் கூப்பி
பணியும் அவர்,Paniyum avar - நமஸ்கரிப்பவர்கள்
பிறப்பிடை தோறு,Pirappidai thoaru - ஜன்மந்தோறும்
நாள் தோறும்,Naal thoarum - தினந்தோறும்
எம்மை,Emmai - எங்களை
ஆள் உடை நாதர் கண்டீர்,Aal udai naadhar kandir - ஆட்கொள்ளும் அடிகளாவர்.