| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2964 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமியான ஸ்வாமிகளென்கிறார்.) 2 | ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத் தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர் நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2 | ஆளும் பரமனை,Aalum paramanai - ஆள்கின்ற பரம புருஷனாயும் கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாயும் ஆழி பிரான் தன்னை,Aazi praan thannai - திருவாழியாழ்வானை யுடைய உபகாரகனாயும் ஓர் நான்கு தோளும் உடை,Or naangu tholum udai - ஒப்பற்ற நான்க புஜங்களையுடையவனாயும் தூ மணி வண்ணன்,Thoomani vannan - பரிசுத்தமான நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனாயுமிருக்கின்ற எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை தாளும் தடக்கையும் கூப்பி,Thaalum thadakkaiyum koopi - கால்களையும் கைகளையும் கூப்பி பணியும் அவர்,Paniyum avar - நமஸ்கரிப்பவர்கள் பிறப்பிடை தோறு,Pirappidai thoaru - ஜன்மந்தோறும் நாள் தோறும்,Naal thoarum - தினந்தோறும் எம்மை,Emmai - எங்களை ஆள் உடை நாதர் கண்டீர்,Aal udai naadhar kandir - ஆட்கொள்ளும் அடிகளாவர். |