| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2965 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார்.) 3 | நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப் பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர் ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3 | நாதனை,Naadhanai - ஸ்வாமியாய் ஞாலமும் வானமும் ஏத்தும்,Gnaalamum vaanamum yaethum - உபய விபூதியிலுள்ளாரும் ஏத்துதற்குரியவனாய் நறுந்துழாய்ப் போதனை,Narunthuzhaip podhanai - பரிமளமுள்ள திருத்துழாய் மலர்மாலையை யுடையனாய் பொன் நெடு சக்கரத்து,Pon nedu sakkarathu - அழகினால் உயர்ந்த திருவாழியை யுடையனான எந்தை பிரான் தன்னை,Endhai praan thannai - எம்பெருமானை பாதம் பணிய வல்லாரை,Paadham paniya vallaaraai - திருவடிகளில் வணங்கவல்லவர்களை பணியும் அவர்,Paniyum avar - வணங்குமவர்கள், ஓதம்,Oadham - பேசப்படுகிற பிறப்பிடை தோறு,Pirappidai thoru - ஜன்மங்கள்தோறும் எம்மை,Emmai - எங்களை ஆள் உடையார்கள் கண்டீர்,Aal udaiyaarkal kandir - அடிமை கொள்பவர்களாவர். |