Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2965 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2965திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார்.) 3
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3
நாதனை,Naadhanai - ஸ்வாமியாய்
ஞாலமும் வானமும் ஏத்தும்,Gnaalamum vaanamum yaethum - உபய விபூதியிலுள்ளாரும் ஏத்துதற்குரியவனாய்
நறுந்துழாய்ப் போதனை,Narunthuzhaip podhanai - பரிமளமுள்ள திருத்துழாய் மலர்மாலையை யுடையனாய்
பொன் நெடு சக்கரத்து,Pon nedu sakkarathu - அழகினால் உயர்ந்த திருவாழியை யுடையனான
எந்தை பிரான் தன்னை,Endhai praan thannai - எம்பெருமானை
பாதம் பணிய வல்லாரை,Paadham paniya vallaaraai - திருவடிகளில் வணங்கவல்லவர்களை
பணியும் அவர்,Paniyum avar - வணங்குமவர்கள்,
ஓதம்,Oadham - பேசப்படுகிற
பிறப்பிடை தோறு,Pirappidai thoru - ஜன்மங்கள்தோறும்
எம்மை,Emmai - எங்களை
ஆள் உடையார்கள் கண்டீர்,Aal udaiyaarkal kandir - அடிமை கொள்பவர்களாவர்.