| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2967 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (ப்ரயோஜநாந்தர பார்க்குங்கூட அபேக்ஷிதத்தைத் தலைக் கட்டிக் கொடுத்தருளு மெம்பெருமானுடைய ஔதார்யத்திலே தோற்றவர்களான பாகவதர்களுக்குத் தோற்று இருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.) 5 | பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர் வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5 | பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை,Peru makkal ullavar tham perumaanai - பெருமக்கள் என்னப்படுகின்ற நித்யஸூரிகட்குத் தலைவனும் அமரர்கட்கு,Amararkatku - சாவாமை வேண்டியிருக்கும் தேவர்களுக்கு அருமை ஒழிய,Arumai ozhia - அருமைப்படாதபடி அன்று,Andru - முன்பொருகாலத்தில் ஆர் அமுது ஊட்டிய,Aar amudhu oottiya - பூர்ணமாக அம்ருதத்தைப் பூஜிப்பித்தவனுமான அப்பனை,Appanai - எம்பெருமானை உத்தேசித்து பெருமை,Perumai - (அவனது) பெருமைகளை பிதற்ற வல்லாரை,Pithatra vallaaraai - அடைவின்றியே சொல்லுமவர்களான பாகவதர்களை பிதற்றுமவர்,Pithatrumavar - அடைவின்றியே சொல்லித் துதிக்குமவர்கள் வருமையும் இம்மையும்,Varumaiyum immayum - இஹலோக பரலோகங்களிரண்டிலும் நம்மை அளிக்கும் பிராக்கள் கண்டீர்,Nammai alikkum praakkal kandir - நம்மை உஜ்ஜிவிப்பிக்கும் ஸ்வாமிகளாவர். |