Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2967 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2967திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (ப்ரயோஜநாந்தர பார்க்குங்கூட அபேக்ஷிதத்தைத் தலைக் கட்டிக் கொடுத்தருளு மெம்பெருமானுடைய ஔதார்யத்திலே தோற்றவர்களான பாகவதர்களுக்குத் தோற்று இருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.) 5
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5
பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை,Peru makkal ullavar tham perumaanai - பெருமக்கள் என்னப்படுகின்ற நித்யஸூரிகட்குத் தலைவனும்
அமரர்கட்கு,Amararkatku - சாவாமை வேண்டியிருக்கும் தேவர்களுக்கு
அருமை ஒழிய,Arumai ozhia - அருமைப்படாதபடி
அன்று,Andru - முன்பொருகாலத்தில்
ஆர் அமுது ஊட்டிய,Aar amudhu oottiya - பூர்ணமாக அம்ருதத்தைப் பூஜிப்பித்தவனுமான
அப்பனை,Appanai - எம்பெருமானை உத்தேசித்து
பெருமை,Perumai - (அவனது) பெருமைகளை
பிதற்ற வல்லாரை,Pithatra vallaaraai - அடைவின்றியே சொல்லுமவர்களான பாகவதர்களை
பிதற்றுமவர்,Pithatrumavar - அடைவின்றியே சொல்லித் துதிக்குமவர்கள்
வருமையும் இம்மையும்,Varumaiyum immayum - இஹலோக பரலோகங்களிரண்டிலும்
நம்மை அளிக்கும் பிராக்கள் கண்டீர்,Nammai alikkum praakkal kandir - நம்மை உஜ்ஜிவிப்பிக்கும் ஸ்வாமிகளாவர்.