| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2968 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாமல் அநந்யப்ரயோஜநரா யிருப்பார்க்குத் தன் வடிவழகை அநுபவிக்கும் உஜ்வல ஸ்வபாவனான எம்பெருமானை அநுபவிப்பார் நமக்கு ரக்ஷகரென்கிறார்.) 6 | அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத் துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர் சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6 | அளிக்கும் பரமனை,Alikkum paramanai - உபகரிக்குமிடத்தில் தனக்கு மேலில்லாதபடி உபகரிக்குமவனும் கண்ணனை,Kannanai - க்ருஷ்ணனாநவந்து அவதரித்தவனும் ஆழி பிரான் தன்னை,Aazi piraan thannai - திருவாழியைக் கையிலேந்தி மஹோபகாரங்கள் செய்யவனும். துளிக்கும் நறுகண்ணி,Thulikkum narukanni - தேன் வெள்ளமிடா நின்று நறுமணம் மிக்க மாலையையணிந்துள்ளவனும் தூமணி வண்ணன்,Thoomani vannan - அழுக்கற்ற மாணிக்கம் போன்ற வடிவையுடையவனும் ஒளி கொண்ட சோதியை,Oli konda sothiyai - அளவற்ற தேஜோ ரூபமான விகரஹத்தை யுடையவனுமான எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை உள்ளத்து கொள்ளுமவர்,Ullathu kollumavar - நெஞ்சிலே தாங்குமவர்கள் எம்மை,Emmai - எம்மை சலிப்பு இன்றி ஆண்டு,Salippu indri aandu - ஒருகாலும் கைவிடாமே அடிமைகொண்டு சன்மம் சன்மாந்தரம் காப்பர் கண்டீர்,Sanmam sanmaantharam kaappar kandir - எத்தனை ஜன்மமானாலும் ரக்ஷிக்குமவர்களாவர். |