Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2969 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2969திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அடியவர் திறந்து அவன் செய்தருளும் மஹோபகாரங்களை அநுஸந்தித்து அப்படிகளைப் பிதற்றல்லாரைப் பிதற்றுமவர்கள் திடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகளென்கிறார்.) 7
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7
சன்மம் சன்மாந்தாந்தரம் காத்து,Sanmam sanmaanthandharam kaathu - மாறி மாறிப்பல பிறப்பும் பிறவாதபடி காத்து
அடியார்களை,Adiyaargalai - அடியவர்களை
கொண்டுபோய்,Kondupoy - (நித்ய விபூதியிலே) கொண்டு போய்
தன்னைபெறுத்தி,Thannaiperuthi - ஸ்வஸ்ரூப ப்ராப்தியைப் பண்ணிக்கொடுத்து
தன் தாள் இணைகீழ்,Than thaal inaikeezh - தனது திருவடிகளின் கீழே
கொள்ளும்,Kollum - அடிமை கொண்டருள்கின்ற
அப்பனை,Appanai - ஸ்வாமியினுடைய
தொன்னை,Thonnai - இயற்கையான ஔதார்யகுணத்தை
பிதற்ற வல்லாரை,Pitharra vallaaraai - வாய்வந்தபடி சொல்லித் திரியும் பாகவதர்களை
பிதற்றுமவர்,Pitharrumavar - வாய்வந்தபடி புகழுமவர்கள்
எம்மை,Emmai - நம்மை
நன்மை பெறுத்து,Nanmai peruthu - நன்மை பெறும்படி பண்ணி
நாள்,Naal - ஆத்ம தத்துவமுள்ளவரையில்
உய்யக் கொள்கின்ற,Uyyak kolginra - உஜ்ஜீவிப்பிக்க வல்லவர்காளக
நம்பர் கண்டீர்,Nambar kandir - நம்பப்படுமவர்களாவர்.