| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2969 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அடியவர் திறந்து அவன் செய்தருளும் மஹோபகாரங்களை அநுஸந்தித்து அப்படிகளைப் பிதற்றல்லாரைப் பிதற்றுமவர்கள் திடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகளென்கிறார்.) 7 | சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத் தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர் நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7 | சன்மம் சன்மாந்தாந்தரம் காத்து,Sanmam sanmaanthandharam kaathu - மாறி மாறிப்பல பிறப்பும் பிறவாதபடி காத்து அடியார்களை,Adiyaargalai - அடியவர்களை கொண்டுபோய்,Kondupoy - (நித்ய விபூதியிலே) கொண்டு போய் தன்னைபெறுத்தி,Thannaiperuthi - ஸ்வஸ்ரூப ப்ராப்தியைப் பண்ணிக்கொடுத்து தன் தாள் இணைகீழ்,Than thaal inaikeezh - தனது திருவடிகளின் கீழே கொள்ளும்,Kollum - அடிமை கொண்டருள்கின்ற அப்பனை,Appanai - ஸ்வாமியினுடைய தொன்னை,Thonnai - இயற்கையான ஔதார்யகுணத்தை பிதற்ற வல்லாரை,Pitharra vallaaraai - வாய்வந்தபடி சொல்லித் திரியும் பாகவதர்களை பிதற்றுமவர்,Pitharrumavar - வாய்வந்தபடி புகழுமவர்கள் எம்மை,Emmai - நம்மை நன்மை பெறுத்து,Nanmai peruthu - நன்மை பெறும்படி பண்ணி நாள்,Naal - ஆத்ம தத்துவமுள்ளவரையில் உய்யக் கொள்கின்ற,Uyyak kolginra - உஜ்ஜீவிப்பிக்க வல்லவர்காளக நம்பர் கண்டீர்,Nambar kandir - நம்பப்படுமவர்களாவர். |