| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2970 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அவனுடைய ஸகலஸம்பத்துக்கும் நிதானமான ஸ்ரீயபதித்வத்தை அநுஸந்தித்து அதிலே யீடுபட்டிருக்குமவர்கள் குலம் குலமாக எனக்கு நாதர் என்கிறார்.) 8 | நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச் கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8 | நம்பனை,Nambanai - நம்பப்படுமவனும் ஞானம் படைத்தவனை,Gnaanam padaithavanai - (தன்னை ஆச்ரயித்து அநுபவிக்கைக்குறுப்பாக) ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணுமவனும் திருமார்பனை,Thirumaarbanai - பிராட்டியைத் திருமார்பிலே உடையவனும் உம்பர் உலகினில்,Umbar ulaginil - மேலுலகங்களில் யார்க்கும்,Yaarkkum - எப்படிப்பட்டவர்களுக்கும் உணர்வு அரியான் தன்னை,Unarvu ariyaan thannai - அறியமுடியாத பெருமையையுடையவனுமான எம்பெருமானை ஏத்துவர் கும்பிநரகர்கள் ஏலும்,Yeththuvaar kumbinaragargal yaelum - துதிப்பவர்கள் கும்பியாக நரகவாஸத்திற்குரிய பாபிகளேயானாலும் அவர் தாங்கள்,Avar thaangal - அவர்கள் எம்,Em - எமது பல்,Pal - பலவகைப்பட்ட பிறப்பு இடைதோறு,Pirappu idai thoru - ஜன்மாவகாசந் தோறும் எம் தொழுகுலம் கண்ணீர்,Em thozhukulam kannir - யாம் தொழும்படியான குலீகராவர். |