Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2970 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2970திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அவனுடைய ஸகலஸம்பத்துக்கும் நிதானமான ஸ்ரீயபதித்வத்தை அநுஸந்தித்து அதிலே யீடுபட்டிருக்குமவர்கள் குலம் குலமாக எனக்கு நாதர் என்கிறார்.) 8
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8
நம்பனை,Nambanai - நம்பப்படுமவனும்
ஞானம் படைத்தவனை,Gnaanam padaithavanai - (தன்னை ஆச்ரயித்து அநுபவிக்கைக்குறுப்பாக) ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணுமவனும்
திருமார்பனை,Thirumaarbanai - பிராட்டியைத் திருமார்பிலே உடையவனும்
உம்பர் உலகினில்,Umbar ulaginil - மேலுலகங்களில்
யார்க்கும்,Yaarkkum - எப்படிப்பட்டவர்களுக்கும்
உணர்வு அரியான் தன்னை,Unarvu ariyaan thannai - அறியமுடியாத பெருமையையுடையவனுமான எம்பெருமானை
ஏத்துவர் கும்பிநரகர்கள் ஏலும்,Yeththuvaar kumbinaragargal yaelum - துதிப்பவர்கள் கும்பியாக நரகவாஸத்திற்குரிய பாபிகளேயானாலும்
அவர் தாங்கள்,Avar thaangal - அவர்கள்
எம்,Em - எமது
பல்,Pal - பலவகைப்பட்ட
பிறப்பு இடைதோறு,Pirappu idai thoru - ஜன்மாவகாசந் தோறும்
எம் தொழுகுலம் கண்ணீர்,Em thozhukulam kannir - யாம் தொழும்படியான குலீகராவர்.