| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2973 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் இனி ஒருநாளும் பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல் முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-7-11 | அடி ஓங்கு,Adi oongu - தங்களுடைய ராஜ்ய ப்ரதிஷ்டை உயர்ந்து வரும்படியான நூற்றுவர்,Nootruvar - (துரியோதனன் முதலானோர்) நூறுபேர்களும் வீய,Veeya - முடியும்படி அன்று,Andru - முன்பொருகால் ஐவர்க்கு,Aivarkku - பஞ்சபாண்டவர்களுக்கு அருள்செய்த,Arulseydha - க்ருபை பண்ணின நெடியோனை,Nediyonai - திருமாலை நோக்கி தென்குருகூர் சடகோபன் குற்றேவல்கள்,Thenkurugoor Sadagopan kutraevalgal - அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய கைங்கரிய ரூபமாய் அடி ஆர்ந்த,Adi aarndha - ஸகலலக்ஷண ஸம்பன்னமான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளும் அவன் தொண்டர் மேல் முடிவு,Avan thondar mel mudivu - பாகவத விஷயத்தில் முடிவான இவை பத்து,Ivai paththu - இப்பதிகத்தை ஆர,Aara - நெஞ்சிலே பொருந்த கற்கிற்கில்,Karkirkil - கற்கவல்லாராகில் சன்மம்,Sanmam - பிறப்பு செய்யாமை,Seyyaamai - மறுபடியும் உண்டாகாதபடி முடியும்,Mudiyum - முடிந்துபோம் |